கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

1964 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோ மாநகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் இல் நடைபெற்ற சம்பவம்.

10,000 மீட்டர் ஓட்டப் பந்தயம் 17 நாடுகளை சேர்ந்த 29 வீரர்கள்,அவர்களில் இலங்கையினை சேரந்த ரனதுங்க கருணாநன்த என்வரும் ஒருவர். ஓட்டப்பந்தயம் ஆரம்பமாகியது சர்வதேச நாட்டு ஒட்டப்பந்தய வீரர்களின் திறமைக்கு முன் இலங்கை வீரர் ரனதுங்க கருணாநன்த விற்கு ஈடு கொடுக்க முடியாமல் போனது அமெரிக்காவினை சேர்ந்த பில்லி மில்ஸ் என்ற முன்னனி வீரர் ரனதுங்க கருணாநன்தவினை பல சுற்றுகள் பின் தள்ளி முதலிடம் பிடித்தார்.
இன்னும் சில ஆயிரம் மீட்டர்கள் மீதம் உள்ள நிலையில் பல சர்வதேச வீரர்கள் முதல் மூன்று இடங்கள் தீர்மாணிக்கப்பட்டது என அறிந்தவுடன் 10,000 மீட்டரை பூரணப்படுத்தாமல் போட்டியினை இடை நடுவே நிறுத்திக் கொண்டனர்.
ஆனால் ரனதுங்க கருணாநன்த மாத்திரம் தான் கடைசி இடம் என்பதனை அறிந்தும் தனது ஒட்டத்தை நிறுத்திக் கொள்ள வில்லை அனைவரும் ஒடி முடித்து விட்ட நிலையில் ரனதுங்க கருணாநன்த மாத்திரம் மைதானத்தில் ஓடுவதனை பார்த்த ரசிகர்கள் கேலிச்சிரிப்பு சிரித்தனர் என்றாலும் ரனதுங்க கருணாநன்த மனம் தளர வில்லை நம்பிக்கையுடன் தனது 10,000 மீட்டர் துரத்தையும் ஒடி முடிக்கனும் என்ற இலக்கில் குறியாக இருந்தார்
இவருடைய 10,000 மீட்டர் எல்லையினை நெருங்கும் போது ரசிகர்கள் ரனதுங்க கருணாநன்தவின் நோக்கத்தினை அறிந்து கொண்டனர் அடுத்த கணம் அனைத்து ரசிகர்களும் தமது ஆசனத்தில் இருந்து எழுந்து ரனதுங்க கருணாநன்தவின் முயற்சிக்கு கைதட்டல்கள் மூலம் உற்சாகம் வழங்கினர்.
இருதியில் ரனதுங்க கருணாநன்த மக்களின் கைதட்டல்களுக்கு மத்தியில் தனது 10,000 மீட்டர்களை ஒட்டத்தை ஓடி முடித்தார்.
ஓட்டப் போட்டி முடிவடைந்ததன் பின்னர் ஒரு ஊடகவியலாளர் ரனதுங்க கருணாநன்தவிடம் ஏன் நீங்கள் கடைசி இடம் என அறிந்தும் ஏன் ஓட்டத்தை பூர்த்தி செய்தீர்கள்
“வெற்றியோ தோல்வியோ ஓலிம்பிக் பேட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது எனது கணவு அந்த கணவு எனக்கு நிஜமாகியது எனக்கு கிடைத்த வாய்ப்பினை நான் முழுமையாக பயண்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டேன் எனவே எனது ஓட்டத்தை பூரணப்படுத்தினேன்”
இவருடய இந்த நம்பிக்கை 1964ஆம் டோக்கியோ ஒலிம்பிக் முடிந்த பின்னும் ஜப்பான் மக்கள் மனதில் பதிந்து காணப்பட்டது. ஜப்பான் அரசாங்கம் இவருடைய சம்பவத்தை பாடசாலை மாணவர்களுக்கு படிப்பினையாக அமைய வேண்டும் என்பதற்காக பாட புத்தகத்தில் இணைத்துக் கொண்டது
ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த நிகழ்வுகள் பற்றிய எவ்வித கருசனையும் காட்டவில்லை
இவ்வாரு இருக்கும் போது 1975ஆம் ஆண்டு ஜப்பான் அரசு ரனதுங்க கருணாநன்தவிற்கு தனது நாட்டில் தொழில் ஒன்றினை வழங்க முன்வந்தது ஆனால் ரனதுங்க கருணாநன்த ஜப்பானுக்கு பயணமாவதற்கு சில தினங்கள் மீத மிருக்கும் போது குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் -----------------இன்று வரை ரனதுங்க கருணாநன்த தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் இலங்கையில் மாத்திரமல்ல ஜப்பான் நாட்டிலும் நீடிக்கின்றது.
ரனதுங்க கருணாநன்தவின் மறைவினை செவியுற்ற அவரது மனைவி சுயநினைவினை இழந்து புத்தி சுயாதீனம் அற்ற நிலைக்கு தல்லப்பட்டாள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ் போதுமானவன்
முகநூல் - Next Change

0 comments:

Post a Comment