கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

திமிங்கிலத்தின் வாந்தியில் அதிசய பொருள் ; கிடைத்தால் நீங்களும் கோடீஸ்வரன்

பிரித்தானியாவில் திமிங்கிலம் வாந்தியில் கண் எடுத்த அதிசய பொருள் ஒன்றை,  கண்டுபிடித்த தம்பதியினர் 1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள  லண்காஷிரே (Lancashire)  என்ற நகரை சேர்ந்த கேரி (Gary) மற்றும் அங்கெல வில்லியம்ஸ் ( Angela Williams ) என்ற தம்பதியினர் அடிக்கடி கடற்கரையை பார்க்க செல்வதை வழக்கமாக கொண்டுவர்கள் .இவர்களின் முக்கிய குறிக்கோளாக திமிங்கிலங்கள் வாந்தி எடுத்த பிறகு கடற்கரையில் ஒதுங்கும் அந்த அதிசய பொருளை கண்டுபிடிப்பது தான்.
நடுக்கடலில் வாழும் திமிங்கிலங்கள் மிகவும் அரிதான மீன்களை சாப்பிட்ட பிறகு சில மீன்கள் சரியாக சமிப்பாடு அடையாமல் திமிங்கிலத்தின் குடல் பகுதிலேயே தங்கி ஒரு பெரிய பந்து போல் உருவாகும் இந்த எச்சத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு திமிங்கிலம் வாந்தியாக வெளியே கக்கும் போது அது மெழுகு பந்துப் போல் இருக்கும் இதுபோன்ற ஒரு பொருளை தான் இந்த பிரித்தானிய தம்பதியினர்  மிட்டலேடன் சான்ட்ஸ் (Middleton Sands) கடற்கரை பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.
இப்பொருளானது அம்பேர்க்ரிஸ்  (Ambergris)  என்று விஞ்ஞானிகள்  அழைக்கின்றனர். இது வாசனை திரவியங்கள் தயாரிக்க மிகவும் முக்கியமானதாக தேவைப்படுவதால், இதன் விலையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்து இருக்கும்.
இதே தம்பதி 3 வருடங்களுக்கு முன்னர் இந்த அதிசய பொருளை கண்டுபிடித்து  1,20,000 பவுண்ட்டுக்கு (2, 46, 60, 169 இலங்கை ரூபாய்) விற்பனை செய்து கோடீஸ்வரராக உயர்ந்துள்ளனர்.
தற்போதும் இதே வகையை சேர்ந்த பொருளை தான் இந்த தம்பதியினரே மீண்டும்  கண்டுபிடித்துள்ளனர். எனினும், முன்னர் கண்டுபிடித்ததை விட இதன் எடை குறைவாகவுள்ளமையால்  இது 50, 000 பவுண்டுக்கு (1 கோடி இலங்கை ரூபாய்) மட்டுமே விலை போகும் எனக் கூறியுள்ளனர்.
தற்போது அப்பொருளை நியூசிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தம்பதியினர் உற்சாகமாக தெரிவித்தனர்.
virakesari

0 comments:

Post a Comment