கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தனது அண்ணனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு பகிரங்க பிரம்படித் தண்டனை!


கணவன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தனது அண்ணன் முறையான நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவர் பள்ளிவாயல் பரிபாலன சபையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.

திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவௌ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தனது தாயின் ஒன்று அக்காவின் மகனுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில்புரிந்து வருபவர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர், தனது அண்ணன் முறையானவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததனால், கருவுற்றுள்ளாள்.

பின்னர் கருக் கலைப்பிற்காக தனியார் வைத்தியர் ஒருவரிடம் சென்று கருவை கலைத்துள்ளார். கருக்கலைப்பு காலத்தின் போது சிசு உருவாகியிருந்ததனால் அடுத்த நாள் குறித்த சிசு இறந்து பிறந்துள்ளது.

அதனை யாருக்கும் தெரியாமல், பானை ஒன்றினுள் போட்டு கள்ளத் தொடர்பு வைத்திருந்த தனது அண்ணனிடம் கொடுத்து கிராம மையவாடியில் புதைத்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த விடயம் குடும்ப உறுப்பினர்களால் அம்பலமாகியது. பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதி மன்றம் அப்பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

இதேவேளை, இது சம்பந்தமாக கிராமத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, புத்திஜீவிகள் குழு கிராம சட்ட விதிகளுக்கமைவாக பள்ளிவாயல் பரிபாலன சபையினரால் குறித்த பெண் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த பெண், தனக்குத் தெரியாமல் அண்ணன் கொத்து ரொட்டியில் மயக்கமருந்து கலந்து தந்து தன்னை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக தனது அண்ணன் மீது பழியைச் சுமத்தியுள்ளார்.

ஆனால், அதன் பின் நடைபெற்ற விடயங்களை கருத்தில் எடுத்து ஆராய்ந்து பார்த்த பள்ளிவாயல் பரிபாலன சபையினர், குறித்த பெண் கணவர் வெளிநாட்டில் இருக்கும் போது அவருக்கு துரோகம் செய்து, வேறு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார் எனக் கருதியது.

இதனால் குறித்த பெண்ணுக்கு பள்ளிவாயல் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ரூபா 25 ஆயிரம் ரொக்கம் தண்டப்பணமாக அறிவிடுவது எனவும் வெள்ளிக் கிழமை கிராம மக்கள் முன்னிலையில் பிரம்படி வழங்குவது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

4 comments:

இர்ஷாத் said...

காத்தான்குடி சம்பவம்போல் ஊடகங்களுக்கு இன்னொரு அவல் கிடைக்கப்போகிறது. இதை செய்தியாக பிரசுரித்து முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினையை உருவாக்குகிறீர்கள். ஒரு திருகோணமலை செய்தியை கஹட்டோவிட்டவில் பிரசுரிக்க வேண்டிய அவசியம் என்ன?

BlogEditors said...

”வெள்ளிக் கிழமை கிராம மக்கள் முன்னிலையில் பிரம்படி வழங்குவது ” மறைக்கவேண்டிய விடயம் என்றால் நாமும் இந்த விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கமாட்டோம். அண்னிய சமூகத்திக்கு இது ஒரு சர்வசாதாரன விடயமாக இருந்தாலும், எமக்கு இதில் நிறைய கற்க வேண்டிய பாடங்கள் உள்ளன. எமது ஊரின் தற்போதைய நிலைமையும் இவ்வாறுதான் உள்ளது. சந்தியில் நடைபெற்ற விடயம் இதற்கு ஒரு உதாரணம். வருமுன் காற்போம் என்ற பழமொழி்க்கு ஒரு சிறந்த சம்பவம் என்பதால் இதை பிரசுரித்தோம்.

இர்ஷாத் said...

ஆனாலும் முஸ்லிம் சமூகம் காத்தான்குடியில் எதிர்கொண்டதுபோன்ற ஒருபிரச்சினையை இச்செய்தியை பகிரங்கப்படுத்தப்படுத்துவதானால் ஏற்படும் அல்லவா? இதன்மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு விளையும் பாதிப்புகளே அதிகமாகும்.

Anonymous said...

ஆம் எமது ஊரில் கூட தனது பெண்பிள்ளைகளை அண்ணன் முறை என்று சொல்லிக்கொண்டு சில பெற்றோர்கள் அவ்வாறு தனது சகோதரர் பிள்ளைகளோடு மிகவும் சரளமாக பழக விடுகிறார்கள்.
இஸ்லாம் மனிதனுக்கு முன்னேச்சரிக்கைய்யாகவே குரானையும் ஹதீசையும் தந்துள்ளது.

ஒரு ஆணும் பெண்ணும் தனிமையாக இருக்கும்போது அவர்களுக்கு துணையாக அவர்களோடு ஷைத்தான் இருக்கிறான் அந்த ஷைத்தான் எந்த பக்குவமான மனிதனையும் இந்த விடயத்தில் ஒரு நொடியில் வழிகெடுக்கும் ஷக்தி உள்ளவன்.

எதோ அந்தப்பெண் இவ்வுலகில் ஓரளவேனும் தண்டனையினை அனுபவித்து இருக்கிறாள் அந்தவகையில் அவள் பாக்கியஷாளி.

நாமும் இவ்வாறான சம்பவம்களை கேட்டு சும்மா ஊர்பலாய் கழுகாமல் படிப்பினை பெற்று வாழ்வோமாக.

Post a Comment