கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

புத்தளத்தில் ஒளிவீசிய எமது ஊர் மைந்தர் மௌலவி யஹ்யா ஹஸரத் அவா்கள் காலமானார்.

எமது கிராமத்தில் பிறந்து புத்தளத்தில் ஒளிவீசிய எமது அன்புக்குறிய எஹியா ஹஸரத் அவர்கள் இன்று ( 12.06.2015) காலமாகியுள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்..! அன்னார் மர்ஹும் ஹாமித் லெப்பை முஹம்மது இப்றாஹீம் ஆலிம் (ஜமாலி)  அவர்களின் புதல்வர் ஆவார்.

புத்தளம் பெரியப்பள்ளியின் முன்னாள் பேஷ் இமாமும், புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் உப அதிபரும், சாஹிரா தேசிய கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமாக மௌலவி யஹ்யா ஹஸ்ரத் அவர்கள் கடமையாற்றியுள்ளார்.

புத்தளத்திற்காக பல்வேறு சேவைகளை ஆற்றிய மௌலவி யஹ்யா ஹஸ்ரத் உயர்ந்த நற்குணங்களுடன் வாழ்ந்தவர். அவருடைய பாடசாலை மாணவர்களும், மத்ரஸா மாணவர்களும் ஏராளம். அதுபோல அவரது சமய, சமூகப் பணிகளினால் பயன் பெற்ற பொதுமக்களும் எண்ணிலடங்கா. எனவே அன்னாருக்காக பிரார்த்திப்போம்! அவருக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை செய்வோம்!

எமது இணையத்தில் மௌலவி எஹியர்களைப் பற்றி சென்றவருடம் பதிந்த ஒரு ஆக்கம்.  இங்கே கிளிக் செய்க.
புத்தளத்திலும் எமது கிராமத்தின் பெயரை பதியவைத்த மௌலவி யஹ்யா ஹஸ்ரத்!

0 comments:

Post a Comment