கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எமது ஊா்வரைபடத்திலிருந்து நீக்கப்பட்ட ஒரு பாதை!

நீண்ட காலமாக பாவனையில் இருந்து ஒரு ஒற்றையடிப் பாதை இப்போது மூடப்பட்டள்ளது. குரவளானவையும், மௌலானபுரவையும் இணைக்கும் இப்பாதை  நாம் அறிந்தவரை சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக பாவனையில் இருந்துள்ளது.

எமது ஊரில் புதிதாக உருவாக்கப்பட்ட் அதிகமான பாதைகள் இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட வரைபடங்களில் காணப்படுவதில்லை. ஆனால் அண்மையில் வேலியிட்டு அடைக்கப்பட்டுள்ள இந்தப் பாதை தெளிவாக பழைய வரைபடங்களில் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.  இங்கு ஆச்சரியப்படக்கூடிய விடயம் என்னவென்றால் இதுவரை இந்த மூடப்பட்ட பாதை சம்பந்தமாக யாருமே எந்தவித கருசனையும் செலுத்துவதைப் போல் காணக்கிடைக்கவில்லை. இந்தப் பாதையை வழமையாக உபயோகிக்கும் அயளவர்களின் நிஷப்தம் கூட சற்று சிந்திக்க வைக்கிறது. இதற்கான காரணமும் புரியவில்லை.


எது எப்படியிருப்பினும் திடீரென மாயமாக மறைந்த இந்த பாதைவிடயத்தை நாம் ஊர் மக்களுடன் பகிர்ந்து கொள்வதோடு, எமது ஊா் நலன் விரும்பிகள், அரசியல் பிரமுகர்கள், மற்றும் பள்ளிவாயல் நிருவாகங்கள் முறையாக கிராம சோவகர் பிரிவினூடா இந்தவிடயத்த சற்று பரிசீலிப்பது சிறந்தது என்பது எமது தாழ்மையான கருத்து.   

0 comments:

Post a Comment