ஜனாஸா அறிவித்தல்
அன்னாரின் ஜனாஸா இன்று (2010.10.30) சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸஹவுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி வைப்பானாக!
Contact: kahatow@gmail.com
சென்னை : காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் எந்தக் குற்றமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் குரலை நெறிக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவுமில்லை. யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது.காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மெளனத்தை உடைத்த அருந்ததி ராயை நான் பாராட்டுகிறேன். அவருக்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம்.ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாட்டின் சகல அரசாங்க ஆஸ்பத்திரிக ளிலும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளை 24 மணி நேரமும் திறந்து சேவை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
வாரத்தின் ஏழு நாட்களும் வெளிநோயா ளர் பிரிவுகளில் 24 மணி நேர சேவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெளிநோயாளர் பிரிவுகளுக்கு தினந்தோறும் பெருமளவு மக்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்ற நிலையில் ஆஸ்பத்திரிகளில் நிலவும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கு மேற்படி நடவடிக்கை உதவுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி; இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தி விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளு க்குத் தேவையான சிகிச்சைகள், பரிசோத னைகள் அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, தொற்றுநோய் உட்பட சகல நோய்களுக்கும் உடனடி சிகிச்சைகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு ள்ளார். இது தொடர்பில் சகல ஆஸ்பத்திரிகளின் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் பணித்துள்ளார்.
நாட்டின் சுகாதாரத்துறை மேம்பாட்டிற் கான முக்கிய நடவடிக்கையாக இத்திட்டம் அமைவதுடன் பல்வேறு நோய்களினால் அவஸ்தைப்படும் நோயாளிகளுக்கு இது பெரும் வரப்பிரசாதமாகவும் அமையும்.
அத்துடன் நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை இதன் மூலம் உறுதிப்படுத்தவும் முடியும்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுகாதார, அமைச்சின் செயலாளர் 24 மணித்தியாலமும் வெளி நோயாளர் பிரிவை திறந்து வைத்து சேவைகளை வழங்கும் யோசனை ஏற்கனவே இருந்ததாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் பணிப்புரை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய இத்திட்டத்தை செயற்படுத்துவதுடன் ஆரம்பத்தில் முக்கிய பெரியாஸ்பத்திரிகளில் இதனை நடைமுறைப்படுத்தவும் அடுத்த கட்டமாக அதனை சகல ஆஸ்பத்திரிகளுக்கும் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் டொக்டர்கள், மருந்தக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி விரைவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதால் அவர் நாடு திரும்பியதும் இந்நடவடிக்கைகள் முனைப்புப் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ஸ)
தென்னாபிரிக்காவில் நடந்து முடிந்த உலகக் கோப்பைக் காற்பந்தாட்டப் போட்டிகளில், ஆர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, எழுந்த சர்ச்சசைகளினால், அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் காற்பந்தாட்டச் சாம்பியன் மாராடோனா நீக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு அவர் நீக்கபட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும் எதிர்ப்பும் கிளம்பியிருந்ததது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு சில நாட்கள் சென்றிருந்த டோனி பிளேயர் மனைவியின் தங்கை இஸ்லாம் மாதத்தில் கொண்ட ஈடுபாடுகளின் காரணமாக மதம் மாறி விட்டார் எனத் தெரிய வந்துள்ளது. ஊடகவியலாளராகவும் ஒளிபரப்பாளராகவும் பணியாற்றி வரும் 43 வயதான லாரன பூத் செர்ரி பிளேயரின் தங்கை.
இவர் தற்போது வெளியில் செல்லும் போது பர்தா அணியாமல் செலவதில்லையாம். தினமும் 5 முறை மறக்காமல் இறை வழிபாடும் செய்து வருகிறாராம்.
தற்போது ஈரானில் இருக்கும் அவர் 6 வாரங்களுக்கு முன்னர் கோம் நகரில் உள்ள பாத்திமா அல்-மாஸுமெஹ் என்ற புண்ணிய தலத்திற்கு சென்றிருந்த போது அங்கு சிறிது நேரம் உட்கார்ந்திருக்கையில் ஏதோ ஒரு தெய்வீக ஒளி தன் மீது பரவியதை உணர்ந்தாராம்.
அதன் பின்னரே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பிரிட்டன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தற்போது இவர் பன்றிக்கறி சாப்பிடுவதில்லையாம். 45 நாட்களாக மது பானங்கள் ஏதும் அருந்தவில்லையாம்.
வாழ்க்கையிலேயே இதுவரை அப்படி இருந்ததில்லை என்றும் கூறுகிறார். தினமும் குரான் படிக்கிறாராம். பிரிட்டன் வந்த உடன் முதல் வேலை மதம் மாறுவது தான் என்கிறார் லாரன பூத்.
![]() |
இணைந்துகொள்ள Kahatowita Watch பக்கத்தை LIKE செய்து இணைந்து கொள்ளலாம் அல்லது உங்களுடைய ஈமையில் முகவரியை இங்கே பதிந்துகொள்ளலாம். |
Email: |
Visit this group |