கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கண்ணீர் வரைந்த கோடுகள்- கஹடோவிட நிஹாஸா நிஸாரின் புத்தக வெளியீடு.

கஹட்டோவிட மண்ணின் மைந்தர்கள் பலர் பல துறைகளில் பிரகாசித்து ஊரின் புகழை உச்சிக்கு ஏற்றிய வரலாறுகள் பல பொன் எழுத்துக்களால் பதியப்பட்டுள்ளன.


இந்த வகையில் எமதூரிற்குப் பெருமை தேடித்தரும் இன்னுமொரு பதிவாக கஹட்டோவிட அல் பத்ரியா மகாவித்தியாலயம் ஈன்றெடுத்த கவிச் செல்வியான நிஹாஸா நிஹாரின் கண்ணீர் வரைந்த கோடுகள் என்ற கவிதைத் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா கடந்த 13.03.2011 ஆம் திகதியன்று கொழும்பு தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வேகம் பதிப்பகத்தினால் இப்புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இச்சகோதரியன் இலக்கியப் பிரவேசம் எமதூரின் இன்னும் பல இலை மறை காய்களாக உள்ள பலருக்கு முன் உதாரணமாய் அமைய வேண்டும் என்பது எமது அவாவாகும். இச்சகோதரியின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நாம் துஆச் செய்வோமாக!

குறிப்பு - இவரது புத்தக வெளியீடு சம்பந்தமான செய்தி கடந்த 12.03.2011 ஆம்திகதியன்று சுயாதீன தொலைக்காட்சியின் தமிழ் செய்தியில்  ஒளிபரப்பப் பட்டது.  

2 comments:

zafran said...

வாழ்த்துக்கள் சகோதரி. எமது கிராமத்திலிருந்து நீங்கள் பிரகாசிப்பது எங்கள் எல்லோருக்கும் பெருமைதான் ஆனாலும் கவிதைக்கு பௌய் அலகு என்பது போல் உங்களது ஆக்கங்களையும் மெய்பிக்காமல், மார்க்க விழுமியங்களை (எல்லைகளைக் கடக்காமல்) பார்த்துக்கொள்வது உங்களது இம்மை, மருமை வாழ்வுகளை ஈடேற்றப் பெற்றுத் தரும். வள்ள அல்லாஹ் அருள்பாளிப்பானாக.

Anonymous said...

meendu mannin maindhana?
don't compare, she is great.

Post a Comment