கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எனது ஊர் மற்றும் மக்கள்...(Facebook வாசகர் ஒருவரின் பார்வை)


வளம்.....

"கஹட்டோவிட்டா" என்ற அழகிய பெயர் எனது ஊர். முற்று முழுதாக 100 சதவீத முஸ்லிம்கள். பலகாலமாக வியாபாரத்தில் எமது ஊரை நம்பியே மாற்று மதத்தவர்கள் வாழ்கிறார்கள், இது அல்லாஹ் எமக்கு கொடுத்த ஒரு மகத்தான அருட்கொடை..மூன்று ஜும்மா பள்ளிகள். பல வைத்தியர்கள் (நாலு பெண்களுக்கு ஒரு ஆண்) அரசாங்க ஊழியர்கள், இஞ்சினியர், அரசியல் சாணக்கியம் மிக்கவர்கள், தொழிலதிபர்கள், தொழினுட்பவியலாளர்கள் என பல கூட்டு உறவுகள் ஒன்றாக உள்ள ஒரு ஊர்.


...பலம்.....
மூன்று தரீக்காக்கள்
தௌஹீத் ஜமாஅத்
DA
ஆசிரியர்கள்
மாணவர்கள்
உலமாக்கள்
தொழிலதிபர்கள்
அரசியலில் ஈடுபடும் நபர்கள்
எல்லாற்றுக்கும் மேலாக துடிப்புள்ள இளைஞர்கள்


பலவீனம்
தரீக்கா- தரீக்காக்கள் அவுராதுகளிலேயே காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கின்றமை
தௌஹீத் ஜமாஅத் - பயான்களிலேயே தஹ்வா நடக்கின்றமை
DA - Enjoy பண்றதையே தஹ்வாவாக ஆக்கிகொண்டிருக்கின்றமை
ஆசிரியர்கள் - தனது கௌரவத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றமை
மாணவர்கள் - ஆசிரியர்களின் பலி ஆடுகள்
உலமாக்கள் - ஒன்று படக் கூடிய விடயங்களை மறந்தே போய்விட்டமை
தொழிலதிபர்கள் - இளைஞர்களை கண்டுகொல்லாமை
அரசியல் ஈடுபடும் நபர்கள் - ஊரை முன்னிளைப்படுத்தாமை
இளைஞர்கள் - இருளில் மூழ்கி உள்ளமை


அன்பர்களே,,,,

என்ன செய்யலாம்??

@ இன்னும் கஞ்சா விற்பவனுக்கு ஒரு முடிவு கிடைக்கவில்லை?
@ ஒரு மைதானத்திற்கு வழியில்லை?
@ தீமைகள் நாள்தோறும் பெருகிக்கொண்டு வருகின்றதே, முடிவு?
@ பெரியவர்களே நாளை இந்த தீமையில் தான் எங்கள் குழந்தைகளும் வளரனும், அப்போ பிறகு பார்ப்போம் என்று விடுவதா?
@ உங்கள் மனைவி மார்களை இதில் விட்டு விட்டு எந்த தைரியத்தில் தொழிலுக்கு வெளி ஊருக்கோ, நாட்டுக்கோ செல்ல முடியும்?
இது தான் நான் நேசிக்கும் எனது ஊர்..
சும்மா கருத்து மட்டும் தரவேண்டாம்..
செயலுக்கு முன் இறங்க ஏன் இளைஞர்கள் வருவார்களா?
இதன் முன்னேற்றத்திற்கு ஊரானின் பங்களிப்பு என்ன?


Jazakumullah Mr. Muhammad.

செவ்வாயில் பாரிய தூசுப் புயல் - கியூரியோசிட்டி செயலிழக்கும் அபாயம்?




செவ்வாய்க் கிரகத்தில் ஆக்ஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வந்திறங்கிய கியூரியோசிட்டி ரோவர் விண்வண்டி அங்கு நுண்ணுயிர் வாழ்க்கைக்கு ஆதாரம் இருக்கிறதா என அறிவதை முக்கிய நோக்காகக் கொண்டு அங்குள்ள மண் பாறை மாதிரிகளை ஆராய்ந்து வருகின்றது.
இந்த ரோபோட்டிக் விண்கலம் கடந்த 10 ஆம் திகதி அங்கு வீசத் தொடங்கிய பாரிய தூசுப் புயலைப் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

பூமியில் உள்ள பாலைவனங்களைப் போலவே தாவரங்களும் விலங்குகளும் அற்ற செவ்வாயின் பெரும்பாலான தரை மேற்பரப்புக்களில் அவ்வப்போது பாரிய புழுதிப் புயல்கள் எழுவதும் அடங்குவதும் வழமை. ஆனால் அவை எதிர்பாராத விதத்தில் தோன்றுவதும் திடீரென காணாமற் போவதும் ஏன் என்பது விஞ்ஞானிகளுக்குப் புதிரான விடயமாகும். மேலும் கடந்த 16 ஆம் திகதி செவ்வாயின் வெப்பநிலையும் திடீரென 25 டிகிரி அதிகரித்துள்ளது எனவும் நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இதேவேளை சில வாரங்களுக்கு முன்னர் செவ்வாயில் தோன்றிய இந்தப் புழுதிப் புயல் நிற்காமல் தொடர்ந்தால் அது கியூரியோசிட்டி விண்வண்டியின் செயற்பாட்டைப் பாதிக்கும் எனவும் விண்வெளியியலாளர்கள் கூறுகின்றனர்.

அது எவ்வாறு எனில் மிக அதிக உயரத்துக்கு எழும் புழுதி கியூரியோசிட்டி இயங்கத் தேவையான சூரிய ஒளியைத் தடுக்கும். மேலும் இந்த ரோபோட்டின் சூரியப் படல்களில் இப் புழுதி படிந்தாலும் அதனால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போகும். கியூரியோசிட்டி விண்வண்டி செவ்வாயில் குறைந்தது 2 ஆண்டுகள் ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

சுப்ரிம் செட் விண்ணை நோக்கி பாய்ந்தது இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள்!

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் சற்று முன்னர் விண்ணுக்கு ஏவப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் இலங்கை நேரப்படி மாலை 3.45 மணியளவில் ஏவப்பட்டதாக இலங்கை பிரதிநிதி விஜித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 22ம் திகதி குறித்த செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்படவிருந்த நிலையில் 5 நாட்கள் தாமதமாகி இன்று மாலை விண்ணுக்கு ஏவப்படுகிறது.
சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான நிலையம் கண்டியிலுள்ள பல்லேகலவில் அமைக்கப்படவுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதும், உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கும் 45வது நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளது.
தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக, சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை கொண்டுள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையையும் இலங்கை பெறும்.



திரைப்படங்களில் முஸ்லிம் விரோத போக்கு


‘துப்பாக்கி’ திரைப்படத்தின் முஸ்லிம் விரோத போக்குப் பற்றி விவாதங்களும்இ மன்னிப்பு நாடகங்களும் நடந்து கொண்டிருக்கின்றது. கமலஹாஷனின் முஸ்லிம் விரோதகுனம் விஷ்பரூபமேடுக்கக் காத்துக் கொண்டிருகின்றது. இவைகளுக்கு மத்தியில் அவை தொடர்பாக எனது சில கருத்துக்கள்.
திரைப்படங்களில் முஸ்லிம் விரோதப்போக்கு தொடர்ந்து வரும் ஒன்று. இது உலக முஸ்லிம்களை இழிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதி. வெகு அன்மையில் அமெரிக்காவில் நாயகத்தை இழிவுபடுத்தும் ஒரு நாடகம் அரங்கேரியதுஇ நேற்றுவரை இந்தியாவில் நடந்தது இன்றும் நடந்துள்ளது. புதிதல்லஇ நாமும் நமது மார்க்கமும் ஊடகங்களில் தாக்கப்படுவது.
படங்களில் முஸ்லிம்களை தாக்குவதும் தெரியாமல் இடம்பெற்றுவிட்டது மன்னியுங்கள் எனக்கோரி நீக்குவதும் திரையுலகின் வேடிக்கை நிறைந்த வாடிக்கையான நடவடிக்கையாகிவிட்டது. பல ஆயிரம் நுணுக்கங்கள் பார்த்தும் இந்து சாஸ்த்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தும் படம் எடுக்கும் இவர்கள் இஸ்லாம் முஸ்லிம் உலகம் பற்றிய எதார்த்தங்களை மறந்தது ஏன். அதுபற்றி தெரியாமல் போனது எப்படி. இது அபத்தம்இ முஸ்லிம்களை முட்டாள்களாக்கும் முயற்சி. இவர்களின் திட்டமிட்ட செயல். இழிவான விளம்பர யுக்தி என்பதே உண்மை.
இந்தியாவைப் பொருத்தவரை வேஷம் போடும் கூத்தாட்டம் பிரதான தொழில். நன்றாய் திறந்து சிறப்பாய் நடித்து வேஷ நாடகம் போட்டு தங்களை ஏமாற்றி தங்களையே ஏய்த்துப் பிழைக்கும் கூத்தாடிகளை கடவுளாக்கி தலைவர்களாக்கி உலக நாயகர்களாக்கி கலாநிதிப்பட்டம் கொடுத்துக் கெளரவித்து அவனுகளின் கட்டவுட்டுகளுக்கு தன் சொந்தப்பணத்தில் பாலபிஷேகம் செய்து மகிழும் புத்தி ஜீவிகள் நிறைந்த நாடு இந்தியா.
இந்த மக்களிடத்தில் தன் தொழிலில் இலகுவாக இலாபம் ஈட்ட தன் வேஷ நாடகத்தை இலவசமாக விளம்பரப்படுத்த இழிவான மிகவும் கேவலமான தரங்கெட்ட பல வழிகளை திரையுலகினர் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்தினால் மற்ற சமயத்தவர்களிடத்தில் தன் கதைக்கும் சதைக்கும் நல்ல வரவேற்ப்புக் கிடைக்கும் என்பதனாலும் முஸ்லிம்கள் எதிர்த்தால் இலவச விளம்பரமும் கிடைக்கும் என்பதனாலும் இந்த வியாபார யுக்தியை தொடர்ந்து இந்தக் கூத்தாடிக் கூட்டம் செய்துவருகின்றது. குறிப்பாக இதைக் கூத்தாடிகலான கமலஹாஷன், விஜயகாந்த், அர்ஜூன் இயக்குனர் மணிரத்தினம் தொடக்கம் பலர் தொடர்ந்து தன் படங்களில் செய்து வருகின்றனர். இதில் இன்று விஜய், முருகதாஸ் எனும் கூத்தாடிக் கூட்டம் புதிதாக இணைந்துள்ளது. அவ்வளவுதான்.
முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளா? இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றதா? அப்பாவிகளைக் கொல்லுவோர் முஸ்லிம் பெயர்தங்கினாலும் அவர்கள் உண்மையான முஸ்லிம்களே இல்லை என்பது இஸ்லாத்தின் ஆணித்தரமான கருத்து. ஆராய்ந்து பாருங்கள் 98 வீதமான முஸ்லிம்கள் தீவிரவாதிகள் இல்லை. தீவிரவாதத்தை தூண்டும் ஒரு விகிதக் கருத்துக் கூட இஸ்லாத்தில் கிடையவே கிடையாது. முடிந்தால் நிரூபிக்கலாம். இது உலகத்திற்கே நீண்டநாளாய் இஸ்லாமிய அறிஞ்சர்களால் விடப்படும் சவால். யாரும் இதை இன்றுவரை சரியாய் எதிர்த்து நின்றதும் கிடையாது வென்றதும் கிடையாது.
காஷ்மீரில் அப்பாவி முஸ்லிம்களுக்கு இந்திய அரச பயங்கரவாதம் செய்யும் கொடூர கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் பற்றியோ குஜராத்தில் நரமாமிசம் திண்ணி நரேந்திர மோடி செய்த மனிதப் படுகொலைகள் பற்றியோ, ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத் தீவிரவாதக் குழுக்கள் முஸ்லிம்களுக்கு இந்தியா முழுவதும் செய்துகொண்டிருக்கும் கொடுமைகள் பற்றியோ, இந்து தீவிரவாதிகளால் அயோத்தியோ பத்தி எரிந்தது அது பற்றியோ, இலங்கையில் விடுதலை புலிகள் எனும் இந்துப் பயங்கரவாத அமைப்பு முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகள் பற்றியோ, மியன்மாரில் பௌத்த மதகுருக்கள் நேரடியாகக் களத்தில் நின்று பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொளுத்திச் சாம்பலாக்கிக் கொண்டிருக்கின்றார்கள், இஸ்ரேல் எனும் முறை தவறிப் பிறந்த யூத நாடு மனிதாபிமானமின்றி அப்பாவி பலஸ்தீன் மக்களுக்கு மிகவும் காட்டுமிராண்டிதனமான அட்டூழியங்களை செய்து கொண்டிருக்கின்றது இது உலகறிந்த உண்மை இது பற்றியோ அமெரிக்க தலைமையிலான கிறிஸ்தவ நாடுகள் உலகம் முழுவதும் செய்யும் அடாவடித்தனங்கள் பற்றியோ எவனாவது படம் எடுத்தானா. அப்படியான உண்மைக் கதைகளை படமாக எடுத்த முதுகெலும்புள்ள எந்த இயக்குனரும் கூத்தாடியும் இந்தியாவில் கிடையாது.
உண்மை இப்படி இருக்கும்போது எதார்த்தங்களுக்கு எதிராக படமெடுக்க முற்படுவது அபத்தமானதும் சமூக அமைதிக்கு ஆபத்தானதுமாகும்.
களைந்து காட்டிப் புளைப்பு நடத்தும் கூத்தாடிக் கூட்டங்களால் ஒரு போதும் இஸ்லாதின் கெளரவத்தை களைய முடியாது. அது எந்தத் தடையையும் தாண்டி மனித மனங்களில் ஊடுரும் வல்லமை படைத்த அல்லாஹ்வின் மார்க்கம். அவனே அதனின் பாதுவாவலன் அதன் வளர்ச்சிக்கு நேரடிப் போறுப்பாளன். இதை நாம் நிரூபிக்கத் தேவையில்லை உலக எதார்த்தங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
இவர்களின் செயற்பாட்டின் மறுபகுதியில் சில தெளிவான உண்மைகளும் இஸ்லாதிற்கான பல நன்மைகளும் உள்ளது.
1. முஸ்லிம்களின் பாரிய எந்த முயற்சியும் இல்லாதஇ இஸ்லாத்தின் இயற்கையான வளர்ச்சி அதன் வேகம் பலரை பயப்படச் செய்துள்ளது. அதனை சிறுபிள்ளைத் தனமான செல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்த முற்படுகின்றனர்.
2. அமெரிக்க வர்த்தக மைய்யம் இஸ்லாத்தின் பெயரால் தாக்கப்பட்டு இஸ்லாத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட பின்னும்இ ஜேர்மனிஇ பிரான்ஸ்இ டென்மார்க் என பல நாடுகளில் இஸ்லாம் தொடர்ந்து இழிவு படுத்தப்பட்ட பின்னும் இஸ்லாம் உலகில் ஒரு துளியும் பின்னகரவில்லை மாறாக முன்னோக்கியே பாய்ந்துள்ளது. தாக்கத் தாக்க வேகமாக வளரும் இஸ்லாத்தைக் கண்டு வட்டிகான் தொடக்கம் உலகமே வியந்து வெந்து நொந்து போய் நிற்கின்றது.
இஸ்லாத்தை தாக்குவதாக நினைத்து தூக்கி விட்டுக் கொண்டிருகின்றார்கள். இவர்களின் முயற்சி இஸ்லாத்தினை மற்றவர் படிக்கத் தூண்டும் இலவச விளம்பம்.
இன்று இந்தக் கூத்தாடிகளுக்கு நான் செய்ய வேண்டியது இதுதான்
  • அவர்களின் தோல்விக்காய் நான் உழைக்க வேண்டும்.
  • அவர்கள் சொல்லுவதுபோல் இஸ்லாத்தின் பெயரால் கீழ்த்தரமாக நடக்கும் ஒரு சிலரும் திருந்தும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
  • கேவலமான கூத்தடித் தொழில் ஒழியப் பாடுபட வேண்டும்
  • வரம்புமீறிப் போகும் இக்கூத்தாடிகளின் தொடராட்டத்தை இந்திய அரசும்இ உலக அரசுகளும் தடுத்து நிறுத்துமாறு ஒருமித்த குரலில் கோரிப் போராட வேண்டும்.
முண்டியடித்து முதல் வரிசையில் நின்று திரையரங்குகளை நிரப்பும் முஸ்லிம்கள் இருக்கும் வரை கூத்தாடிகளுக்கு காத்தாடிகள் போல் செயற்படும் ரசிகர் மன்றங்களில் எம் முஸ்லிம்கள் இருக்கும் வரை அவர்களின் வியாபார வெற்றியில் ஒரு முடியளவு நஷ்ட்டதைக் கூட எம்மால் ஏற்படுத்த முடியாது என்பது மட்டும் உண்மை.
நிச்சயம் அசத்தியம் அழிந்தே போகும். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.
 
மௌலவி மஸ்ஊத் அஹ்மத் -ஹாஷிமி

இஸ்ரேலிய உருவாக்கம் - ஒரு ஆய்வு பார்வை.....!


அவர்கள் சந்தித்தனர். அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர...
்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன்.

அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு.
இனி அவர்கள் தங்கள் இனத்திற்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். எங்கே உருவாக்குவது? எப்படி உருவாக்குவது ?

அவர்களுடைய வேதத்திற்கு பெயர் ‘தவுராத்.’ பத்துக் கட்டளைகள் என்றும் கூறுவார்கள். தங்கள் தேசம் எங்கே இருக்கிறது என்பதை அந்த வேதம் சுட்டிக் காட்டியிருப்பதாக கற்பிதம் செய்தார்கள். இப்படித் தான் இஸ்ரேல் என்ற நாட்டிற்காக ஒரு கரு உருவாக்கப்பட்டது.

இதனை முதன் முதலாக எதிர்த்துக் குரல் எழுப்பியவர் அண்ணல் காந்தியடிகள் தான். தங்கள் தேசம் இருந்த இடம் என வேதம் வாக்களித்திருக்கிறது என்று கூறி எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கக் கூடாது. அப்படி இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப் படுவதை எதிர்க்கிறோம். அதனையும் மீறி அப்படி ஒரு நாடு உருவாக்கப்படுமானால் அதனை உலகம் அங்கீகரிக்கக் கூடாது. கண்டிப்பாக இந்தியா அங்கீகரிக்காது என்று அண்ணல் காந்தியடிகள் தெரிவித்தார்.
ஆனாலும், வட்டிக்காக கடன் பெற்றவளின் கண்களையே கேட்கின்ற அந்த யூத மகாப்பிரபுக்கள் ஜோர்டான் எல்லையை ஓட்டிய பாலஸ்தீனப் பகுதிக்குள் காலடி பதித்தனர்.

அரபு மக்கள் ஒரு வகையினர் நமது நாடோடி மக்களைப் போல் வசிக்கும் பழங்குடி மக்கள் . அவர்களுக்கு ஜோர்டான் எல்லையோரம் பாலஸ்தீனப் பரப்பிற்குள் சொந்த நிலங்கள் இருந்தன. அவைகள் ரோஜா தோட்டங்களோ, பேரீச்சை தோட்டங்களோ அல்ல. கள்ளிச் செடி மேலும் வானம் பார்த்த பூமி.
அந்த நிலங்களை யூத மகாபிரபுக்கள் வாங்கினர். விலை என்ன தெரியுமா? யானை விலை, குதிரை விலை என்பார்களே அதற்கும் அதிகம்தான். அப்படி வாங்கப்பட்ட இடங்களில் யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

அப்போது அண்டையிலுள்ள அரபு நாடுகளெல்லாம் அவர்களுக்கு அனுதாபமாகவே இருந்தன. யூத இனத்தையே பூண்டோடு ஒழிப்பது என்பது ஹிட்லரின் லட்சியம். அதற்காக அவன் படை கொண்டு சென்ற நாடுகளிலெல்லாம் முதன் முதலாகச் செய்த கைங்கரியம் யூத மக்களை அழித்ததுதான். தப்பித்த யூதர்கள் அடைக்கலம் தேடி உலகம் முழுமையும் ஓடிக்கொண்டிருந்தனர்.

இது அண்மைக் கால வரலாறு. ஆனால், சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஷியாவும், ஐரோப்பிய நாடுகளும் யூதர் என்றாலே முகம் சுளித்தனர். அவர்களை தண்டிக்கப்பட்ட மக்களாகவே கருதினர். அப்படி சரித்திரத்தால் சபிக்கப்பட்ட மக்கள் இங்கேயாவது இளைப்பாறட்டுமே என்று உண்மையில் அரபு மக்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டனர்.

அவர்கள் உருவாக்கிக் கொண்ட குடியிருப்பு நாளை தங்கள் எல்லைகளையே தீண்டப்போகும் மலைப்பாம்பு என்பதனையும் அதற்கு இரையாகப் போகும் மான்குட்டிகள்தான், அரபு நாடுகள் என்பதனையும் அப்போது அவர்கள் உணரவில்லை. அந்த மலைப்பாம்பு மெள்ள மெள்ள நெளியத் தொடங்கியது. தமது நீளத்தை காட்ட தொடங்கியது. சுற்றிலுமுள்ள அரபு நாடுகளுக்குள் தமது வாலினை நீட்டியது. அந்த நிலமெல்லாம் யூத சமுதாயத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உரிமையாக இருந்தது.

எனவே, இப்போது தங்கள் மூதாதையர் விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தில் தங்களுக்குப் பாத்தியம் உண்டு என்று யூதர்கள் கோரிக்கை வைக்கவில்லை. அபகரிக்கவேத் தொடங்கினர்.

முதல் உலகப் போருக்குப் பின்னர் பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்தது. பாலஸ்தீனத்தில் யூதர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்துவதை பிரிட்டன் ஊக்கப்படுத்தியது. காரணம் அந்த நாட்டை விட்டு வெளியேறினாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் -அரபு நாடுகளுக்கு மத்தியில் ஒரு ஏவல் பிராணியை வளர்த்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. பின்னர் பிரிட்டனுக்கு துணையாக அமெரிக்காவும் வந்தது.

பாலஸ்தீனத்திற்குள்ளேயே யூதர்களின் குடியிருப்புக்கள் பெருகின. பின்னர் இணைந்தன. தங்கள் பூமிக்குள் ஓர் கள்ள தேசம் உருவாவதை அப்போதுதான் பாலஸ்தீன மக்கள் நன்றாக உணரத் தொடங்கினர். எனவே, 1920ம் ஆண்டு முதன்முதலாக பாலஸ்தீன மக்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடித்தன.

அடுத்த ஆண்டே இன்னொரு இனக்கலவரம். 1929 ம் ஆண்டு நடந்த மோதல் பயங்கரமானது. `ஹெப்ரான் படுகொலை’ என்று வர்ணிக்கப்பட்ட அந்த வெறித்தனமான மோதலில் ஏராளமான பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். காரணம் யூதர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை பெற்றிருந்தனர். அத்தனையும் அமெரிக்க தயாரிப்புத் தான்.

1936ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் யூத ஆதிக்கத்தை எதிர்த்து வெகுண்டெழுந்தனர். அந்த எழுச்சி 1939 ம் ஆண்டு வரை பொங்கும் எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் யூதக் குடியிருப்புக்களுக்கு உதவியாக பிரிட்டனும், அமெரிக்காவும் பெருமளவில் ஆயுத உதவிக்கள் செய்தன. கரங்களாலும், கவண் கற்களாலும் பாலஸ்தீனிய இளைஞர்கள் எவ்வளவு காலம் போராட முடியும்?

பாலஸ்தீனத்திற்குள் யூதர்களுக்கு என்ன உரிமை என்பதனை தீர்மானிக்க பல்வேறு கமிஷன்களை பிரிட்டன் அமைத்தது. கடைசியாக இந்தப் பிரச்சனையை ஐ.நா மன்றத்திற்கு கொண்டு சென்றது இப்படி. பாலஸ்தீனத்தின் இதயத்தைப் பிளந்து உருவாகிவரும் இஸ்ரேலைஒரு நாடாக அங்கீகரிப்பது என்பதுதான் தீர்வாகும்.

எப்படி நமது துணைக் கண்டத்தை இந்தியா - பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக உருவாக்கியதோ, அதே போல பாலஸ்தீனம் அதற்குள் இஸ்ரேல் என்ற கோட்பாட்டை ஐ.நா மன்றத்தில் பிரிட்டன் முன்மொழிந்தது.
இந்த நிலையில்தான், இன்னொரு தேசத்தைத் துண்டாடி ரத்தக்கோடுகளால் இஸ்ரேல் என்று ஒரு நாட்டை உருவாக்குவதை உலகம் ஏற்கக்கூடாது என்று அண்ணல் காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார்.

ஆனாலும், அரபு மக்களின் தாயகமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப்படுவதை ஐ.நா மன்றம் அங்கீகரித்தது. அந்த மன்றம் அமெரிக்கா ஆட்டி வைக்கும் பொம்மை என்பதனை எத்தனையோ முறை மெய்பிக்கவும் செய்திருக்கிறது.

சியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை




இஸ்ரேல் என்பது யூதர்களின் தாயகம் என்றும், அது பாலஸ்தீனர்களை மட்டுமே அடக்குவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால், உலகில் எத்தனையோ யூதர்கள், இஸ்ரேல் என்ற தேசத்தையும், சியோனிசக் கொள்கையையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இஸ்ரேலில் வாழ்ந்தால், அரசு சிறையில் போட்டு சித்திரவதை செய்கின்றது. வெளிநாடுகளில் வாழ்ந்தால், வாயை அடைக்க வைக்க பல்வேறு வழிகளில் முயல்கின்றது. மாறுபட்ட அரசியல் கொள்கை காரணமாக, இஸ்ரேலிய அரசினால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட யூத மதகுரு ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர் இறுதியில் விடுதலை செய்யப்பட்டு, நெதர்லாந்து வந்து சேர்ந்து, தற்பொழுது ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கின்றார ஆனால், அவரின் மனைவியையும், மகனையும் இஸ்ரேலிய அரசு தடுத்து வைத்திருப்பதால், அவர்களை பிரிந்து வர வேண்டிய அவலம் நேர்ந்தது. இன்று வரையில், தனது மனைவியும், மகனும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாமல் தவிக்கிறார்.

Josef Antebi என்ற யூத மதகுரு, ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த, "காஸா போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்" கலந்து கொண்டார். அப்போது தான் முதன்முதலாக அவரைப் பற்றி நான் கேள்விப் பட்டேன். ஆர்ப்பாட்டத்தில் முன்வரிசையில் நின்ற அவரை படம் எடுத்து, அதனை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அந்தப் படம், பலரைக் கவர்ந்திருந்தது. (அந்தப் புகைப்படத்தை இங்கே இணைத்துள்ளேன்.) காஸா போர் எதிர்ப்பு பேரணி என்றால், அரேபியர்கள், அல்லது முஸ்லிம்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்திருப்பார்கள் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆனால், ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல்லின மக்கள் பங்களித்திருந்தனர். பெருமளவு (இடதுசாரி) டச்சுக் காரர்களும் வந்திருந்தனர். ஆனால், யூதர்கள் அதிலும் மதகுருக்கள் கலந்து கொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இங்கேயுள்ள படத்தில் காணப்படும், ஜோசெப் என்ற யூத மதகுரு, வருகிற திங்கட்கிழமை காஸா போகப் போவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு தான், அவரைப் பற்றிய தகவல்கள் பல எனக்குத் தெரிய வந்தன.

இன்றைய இஸ்ரேலில் வாழும், 90 சதவீதமான யூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தேறிய குடிகள் ஆவர். அன்றைய பிரிட்டிஷ் காலனியான பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்கள், இன்று சொந்த நாட்டில் சிறுபான்மையினராக உள்ளனர். ஐரோப்பிய யூதர்கள் குடியேறும் வரையில், பாலஸ்தீனத்தில் யூதர்களும், அரேபியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கிடையில் இனப்பகை சிறு துளியேனும் இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சியோனிசம் என்ற கொள்கை வழி நடந்த தேசியவாத யூதர்கள், பாலஸ்தீனத்தில் வந்து குடியேறினார்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய யூதர்கள் வந்து குடியேறியதால், அவர்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டது. அதுவே பிற்காலத்தில், "இஸ்ரேல் என்ற தேசத்திற்கான சுதந்திரப் போர்" என்று அழைக்கப் படலாயிற்று. வந்தேறுகுடிகளான ஐரோப்பிய யூதர்கள், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியரின் நிலங்களை அபகரித்து, குடியேற்றங்களை உருவாக்கினார்கள். நில அபகரிப்பை எதிர்த்த அரேபியரை தாக்கினார்கள். அப்போது அங்கு வாழ்ந்த "பாலஸ்தீன யூதர்கள்", அரேபிய அயலவரின் பக்கம் நின்று போராடினார்கள்.

தற்பொழுது ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும் யூத மதகுருவான ஜோசெப், ஒரு பாலஸ்தீன யூதராக, பாலஸ்தீனத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் தனது வாழ்க்கை கதையை, சுருக்கமாக கூறினார்:

"நான் ஒரு பாலஸ்தீன யூத குடும்பத்தை சேர்ந்தவன். பாலஸ்தீன விவசாயிகளுடன் சமாதானமாக வாழ்ந்து வந்தோம். யூதர்கள் அல்லாத பாலஸ்தீனியர்கள் மீதான சியோனிச தாக்குதல்களை ஒன்று சேர்ந்து எதிர்த்து வந்தோம். அதற்காக நான் பெரியதொரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. என்னைப் போன்ற, பாலஸ்தீனத்தில் பிறந்த யூதர்கள், சியோனிசத்தை எதிர்த்து போராடுவதை இஸ்ரேலிய அரசினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னை கடத்திச் சென்று, சிறையில் அடைத்து வைத்தார்கள். சித்திரவதை செய்தார்கள். கடைசியில் நாட்டை விட்டு வெளியேறினேன். நான் எனது மனைவியை இழந்தேன். எனது மகனை பதினெட்டு வருடங்களாக பார்க்கவில்லை. அதனால் இப்போதும் வருந்திக் கொண்டிருக்கிறேன். பிறந்த இடத்தை விட்டு வெளியேறுவது எத்தனை வேதனையானது என்பது எனக்குத் தெரியும். பிள்ளையை இழப்பது எந்தளவு வலி எடுக்கும் என்பது எனக்குப் புரியும். அதனால் தான், காஸாவில் அல்லலுறும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக, நான் அங்கே செல்லவிருக்கிறேன்."

வருகிற திங்கட்கிழமை, ஆம்ஸ்டர்டாமில் இருந்து செல்லும் குழுவில் ஜோசேப்பும் இடம்பெருகிறார். அந்தக் குழுவினர் முதலில் எகிப்து சென்று, எல்லை கடந்து காஸாவினுள்ளே நுழைய இருக்கின்றனர். இஸ்ரேலியப் படைகளின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள காசாவில், அவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு மனிதக் கவசமாக தங்கியிருப்பார்கள்.

thanks kalayarasan (tamil brother)

செவனகலையில் சிவப்பு மழை .




செவனகல பிரதேசத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் சிவப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.


செவனகல,இந்திகொலபெலஸ்ஸ, முதலாம் இலக்க கிராமத்தில் சற்று நேரத்துக்கு முன்னரே சிவப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மழை நீரை பாத்திரங்களில் சேகரித்துப் பார்த்தபோது அந்நீர் சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்று காணப்பட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை மழை நீர் பட்ட இடங்களில் எல்லாம் சிகப்பு நிறத்திலான படிமங்கள் காணப்படுவதாகவும் வீட்டு கூரைகள், இலைகள் மற்றும் ஆடைகளிலும் சிகப்பு படிமங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.



நயீமா உம்மா காலமானார்

கஹடோவிடவைச் சேர்ந்த நயீமா உம்மா அவர்கள்  காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னார் மர்ஹும் நூர்தீன் அவர்களின் மனைவியும். பாரூக் நானா (Bag), பிர்தௌஸ் நானா, நூர்தீனா, உம்மு ஆய்ஷா, உம்மு ஸலீமா, பாத்தும்மு ஸைமா ஆகியொரின் தாயாரும். ஜனாப் நாஸிர் (மள்வானை), ஆமிர் (மள்வானை), அல் ஹாஜ் மஹ்மூத் ஆகியொரின் மாமியும் ஆவர்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (13.11.2012) மாலை 5.00 மணியலவில் கஹடோவிட முஹியத்தீன் முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ் இச்சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

ஆய்விலும் ஆவணப்படுத்தலிலும் எமது சமூகம் பின்நிற்கிறது – அஷ்கர் கான்



எம்.பி.ஏ.படிப்பை நிறைவு செய்துள்ள இவர் முகாமைத்துவ ஆலோசனை, சந்தைப்படுத்தல் மற்றும் மனித வள அபிவிருத்தியில் தேர்ச்சி மிக்கவர். முகாமைத்துவ, சந்தைப்படுத்தல் ஆலோசகராக இருக்கும் இவர், ஊடகத்துறை, ஆவணப்படத் தயாரிப்பிலும் அக்கறை கொண்டவர்.

சமூகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அஷ்கர் கான் அவர்கள் (Caring Hands, Knowledge Box) ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் INSIGHT கல்வி நிறுவனத்தின் இயக்குனர் சபை உறுப்பினராகவும் முஸ்லிம் கவுன்ஸிலின் செயலாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.

...................................................................
மீள்பார்வைக்காக அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.


சந்திப்பு: இன்ஸாப் ஸலாஹுதீன்

Knowledge Box உருவாக்கம் பற்றி குறிப்பிட முடியுமா?

சமூகத்திலே ஒரு சாதகமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனையின் விளைவே இந்த ஊடக நிறுவனம். இலத்திரனியல் ஊடகத்தின் ஊடாக அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விழுமியங்களுடன் கூடிய ஒரு வலைப்பின்னலை நாம் ஏற்படுத்த முனைகின்றோம்.

ஒரு தனி நிறுவனத்தினால் மாத்திரம் அதனை சாதித்து விட முடியாது. ஏனைய அனைத்து ஊடக வலைப்பின்னல்களும் சேர்ந்துதான் இதனை சாத்தியப்படுத்த முடியும். அதற்கு உதவி செய்யும் வகையில்தான் இந்த நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கான தனியான ஊடகம் ஒன்று உருவாக்கப்படும் போது அதற்குரிய வளங்களை, நிகழ்ச்சிகளை நாமும் வழங்க வேண்டும் என்பது எமது முக்கிய நோக்கங்களுள் ஒன்றாகும்.

சமூக மாற்றத்தை நோக்கிய படைப்புக்களை தரமான தயாரிப்புக்களாக வழங்க வேண்டும் என்பது எமது மற்றொரு குறிக்கோளாகும்.

வெறுமனே மகிழ்வளிப்புக்கான படைப்புக்களை மாத்திரம் உருவாக்காமல் அறிவுக்கும் சிந்தனைக்கும் துணை செய்யக் கூடிய படைப்புக்களையே நாம் உருவாக்க நினைக்கின்றோம்.
ஊடக நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குறித்து என்ன சொல்கிறீர்கள்?

அடுத்தவர்களை போட்டியாளர்களாகப் பார்க்காமல் உதவியாளர்களாக நாம் பார்க்க வேண்டும். ஊடகத்தின் முக்கியத்துவத்தை இன்னும் எமது சமூகம் சரியான முறையில் உணர்ந்து கொள்ளவில்லை.

இன்று பல ஊடகங்கள் சமூகத்தின் பல்வேறு வட்டங்களில் செயற்படுகின்றன. இப்படி செயற்படுகின்ற எல்லோருக்கும் மத்தியில் முதலில் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அதற்கு அடுத்த கட்டமாக இணைந்து பணியாற்றுவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் ஒரே சிந்தனை ஓட்டத்தில் எமது சமூகத்தின் பிரச்சினைகளை எமது ஊடகங்களால் பேச முடியும்.

இணைப்பு இல்லாமல் தனித் தனியாக செயற்படுகின்றபோது ஒரு வேலையை பலர் செய்கின்ற நிலை தோன்றுகின்றது. அதேபோல ஒரு பிரச்சினை வரும்போது அது எப்படி பார்க்கப்பட வேண்டும் என்ற பொதுப்பார்வை சகல அமைப்புக்களிடமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு ஊடகங்கள்தான் உழைக்க வேண்டும். அப்படியாயின் முதலில் ஊடக நிறுவனங்கள் தங்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பிற்கு வர வேண்டும். அனைவருமாகச் சேர்ந்து சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். அப்போது அந்தக் குரல் வலுவானதாகவும் அர்த்தம் கூடியதாகவும் இருக்கும்.

இலங்கை முஸ்லிம்களைப் பற்றி அறபுலகத்திற்கு என்ன தெரியும் என அண்மையில் வதா கன்பர் கூறும்போது, இலங்கை ஒரு அழகான நாடு, அங்கு நல்ல தேயிலை கிடைக்கும் என்பது தான் அவர்களுக்குத் தெரியும். இங்கிருக்கும் முஸ்லிம்களின் வாழ்வியல், கலாச்சாரம், சவால்கள் குறித்து அவர்கள் எதுவும் அறிந்தவர்களாக இல்லை எனக் கூறினார்.

எனவே, எமது பிரச்சினைகள், சவால்கள் சர்வதேச மட்டத்திலும் பேசப்படுவதற்கான வழி வகைகளை ஒருங்கிணைந்த ஊடக வலைப்பின்னல் மூலம் நாம் ஏற்படுத்த வேண்டும். அத்தோடு எமக்கிருக்கின்ற சவால்கள் மிகப் பாரியதாக இருக்கின்றன. எனவே, தமது சொந்தக் கருத்தியல்களுக்கு அப்பால் அந்த சவால்களை எதிர்வு கொள்வதற்காக ஒரு பொதுத் தளத்தில், பொதுச் சிந்தனையின் அடிப்படையில் நாம் அனைவரும் செயற்பட வேண்டிய ஒரு முக்கிய தருணத்தில் இருக்கிறோம்.

முஸ்லிம் சமூக நிறுவனங்களின் முகாமைத்துவம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

சமூக நிறுவனங்கள் ஒப்பீட்டு அளவில் முன்பை விட இப்பொழுது தேர்ச்சி பெற்று வருகின்றன அவர்களது எல்லா விடயங்களிலும் அந்த மாற்றத்தை அவதானிக்க முடிகின்றது. ஒரு முடிவை அடையாளப்படுத்தி விளைவை நோக்கி பயணிக்கும் முறையின் மூலமே வெற்றியை துரிதப்படுத்திக் கொள்ள முடியும்.

சமூக நிறுவனங்கள், தஃவா அமைப்புக்கள், சமூக ஆர்வலர்களின் எண்ணிக்கை முன்பை விட தற்போது சமூகத்தில் அதிகரித்துள்ளது. ஆனால், சமூகப் பிரச்சினைகள் குறைந்துள்ளதா அதற்குரிய தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் இல்லை என்ற ஒற்றைப் பதிலே எமக்கு கிடைக்கின்றது.

இதற்கு என்ன காரணம் என்றால், அடைவை நோக்கிய அணுகு முறை பின்பற்றப்படாமைதான். இது முகாமைத்துவத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும். ஒரு வியாபார நிறுவனம் தன்னுடைய வெற்றியை இலாபாத்தை வைத்து இலகுவாக தீர்மானித்துக் கொள்ளும். ஆனால், சமூக நிறுவனங்கள் தமது வேலைத்திட்டத்தின் விளைவை வைத்துத்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும்.

எனவே, விளைவை மையப்படுத்திய வேலைத்திட்டமாக தமது பணிகளை சமூக நிறுவனங்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக, கடந்த ரமழானிலே செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சிகள் எந்தளவு தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தியது என்பதை நாம் சிந்தித்தாக வேண்டும்.

ஊர் மட்டங்களில் அது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி இருந்தாலும், தலை நகரத்தில் இடம்பெற்ற பிரமாண்டமான இப்தார் நிகழ்வுகள் எம்மை ஒரு ஆடம்பர சமூகம் எனவும் அதிகம் பணம் உள்ளவர்களெனவும் அடையாளப்படுத்தி இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

சமூக நிறுவனங்களில் இருக்கின்ற மற்றொரு விடயம்தான் எப்போதும் அவை நல்லவர்களையே தேடுகின்றன. ஒரு நிறுவனத்தின் போக்கு நல்லவர்களாலும், வல்லவர்களாலும்தான் தீர்மானிக்கப்படுகின்றது. எல்லா அமைப்புக்களும் தமது சிந்தனையோடு ஒத்துப்போகக் கூடிய நல்லவர்களிடமே பொறுப்புக்களை கொடுக்கின்றன. ஆனால், அடைவு மட்டம் பாதிக்கப்படும்போது அது அப்படித்தான் என தம்மை தேற்றிக் கொள்கிறார்கள்.

எனவே, நல்லவர்கள் தரமானவர்களாகவும் இருக்கின்றார்களா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சமூக நிறுவனங்கள் தனிநபர்களின் ஆளுமை ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது. அது நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. மேலும், தலைமைத்து வத்திற்கு அடுத்த பரம்பரையையும் உருவாக்குவதில் அதிகம் முனைப்புக் காட்ட வேண்டும்.

எமது சமூகத்தில் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எமது சமூகத்தில் இன்று ஆய்வாளர்கள் குறைந்து போயிருக்கிறார்கள். ஆய்வுக்காக நேரத்தை ஒதுக்குபவர்களும் குறைந்திருக்கிறார்கள். இதன் முக்கியத்துவத்தை நாம் காலம் கடந்துதான் புரிந்து கொள்ளக் கூடும்.

சமூகம் சார்ந்த ஆய்வுகள் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. செய்யப்பட்ட ஆய்வுகளும்கூட ஆவணப் படுத்தப்படவில்லை. இந்த நாட்டின் தேசிய நூதனசாலைக்கு முஸ்லிம்களின் ஆவணங்களைத் தேடிச் செல்லும் ஒருவர் வெறுங்கையுடனே திரும்பி வர வேண்டி இருக்கின்றது.

எமக்கான பொது ஆய்வு மையம் ஒன்றின் அவசியத்தை நாம் வேண்டி நிற்கின்ற இக்கால கட்டத்தில் ஆய்வுகளை ஊர், பாடசாலை மட்டங்களில் ஊக்குவிக்க வேண்டும்.

அத்தோடு, ஆவணப்படங்களை தயாரிப்பதிலே நாம் மிகவும் பின்நிற்கின்றோம். கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆவணப்படுத்தல் தொடர்பான செயலமர்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. பல்வேறு நாடுகளிலிருந்து பல ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் அங்கு வந்திருந்தார்கள். அப்போது எமது சமூகத்தை நினைத்து கவலைப் படுவதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை.

அல்-ஜஸீரா, பி.பி.சி. போன்ற ஊடகங்களில் செய்தியை அடுத்து அவற்றின் ஆவணப்படங்களுக்கே அதிக வரவேற்பு இருக்கின்றன. ஆவணப் படம் (Documentary) என்பது சமூகப் பிரச்சினைகளைப் பேச ஒரு வலுவான ஆயுதம்.
எமது சமூகத்தின் முதன்மைப் பிரச்சினையாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

சமூகத்தை நோக்கிய பார்வையில் இருக்கும் தெளிவின்மை அல்லது அறிவின்மையே என்னைப் பொறுத்தவரையில் எமது சமூகத்தின் முதன்மைப் பிரச்சினையாகும். அந்த அறியாமையின் காரணமாக மக்கள் பிழையாக வழிநடாத்தப்படுகின்றனர்.
எனவே, மக்களின் மனப்பாங்கு, சிந்தனை என்பவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும். எனது மகன் எப்படி செல்வம் சம்பாதிப்பான் என்பதை விட தனது திறமைகளை இந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் எப்படி செலவழிப்பான் என்று நம் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.
நல்ல மக்கள் இல்லாமல் ஒரு நல்ல அரசியல்வாதி தோன்ற முடியாது. எனவே, சமூகத்தை நோக்கிய எமது பார்வையில் இருக்கும் அறியாமை நீக்கப்பட வேண்டும். இந்தத் தெளிவின்மைதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாகும்.
எனவே, ஒரு திசையை நோக்கி சமூகத்தை நகர்த்த வேண்டும். சமூகத்தை வழிநடாத்த முன்வருபவர்களும் அதனைச் செயற்படுத்தும் மக்களும் ஒருமைப்பட்ட சிந்தனையோடு சமூக மாற்றத்தை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். ஊடகங்கள் இதற்கு தமது மகத்தான் பங்களிப்பை வழங்க வேண்டும். மக்களது தெளிவின்மையைப் போக்கி அவர்களை அறிவூட்ட எமது ஊடகங்களை நன்கு திட்டமிட்ட வகையில் நாம் பயன்படுத்த வேண்டும்.

முஸ்லிம் சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இடமாற்றம்


முஸ்லிம் சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி (நளீமி) மத விவகார அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹஜ் விவகாரங்களின்போது அமைச்சர் பௌஸி மற்றும் பிரதி அமைச்சர் காதர் (ஹாஜியார்) இற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்களினால் முஸ்லிம் சமய கலாசார திணைக்களமும் அதன் பணிப்பாளரும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹஜ் பயணம் மேற்கொள்வோர் ஒரு வருடத்திற்கு முன்னரே முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒரு முறை ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் மீண்டும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற விடயங்களை இப்பணிப்பாளர் மேற்கொண்டுள்ளார்.
இவைகளை மறுப்பதுடன், தங்களுக்கு சில ஹஜ் வீசாக்களை வழங்க வேண்டும் என குறித்த அரசியல்வாதிகள் கோரியுள்ளனர். அதனை பணிப்பாளர் மறுத்துள்ளதுடன், புதிதாக ஹஜ்ஜுக்குச் செல்வோருக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சில சிறந்த செயற்பாடுகளை மேற்கொண்டதால் இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.-

ராஸிக் நானா அவர்கள் காலமானார்.

கஹடோவிடாவைச் சேர்ந்த மர்ஹுமா நஜீபா அவர்களுடைய அன்பு மகன் ராஸிக் அவர்கள் காலமானார். அசீம், ராபி, ரமீஸ், அஸீமா, துல்பிகா, அஸ்மியா ஆகியொரின் தந்தையும், சகோதரர் பிஸ்தாமி (ஹாட்வயர்) அவர்களுடைய மாமாவும், சகோதரர் ஜுமைல் உடைய அப்பாவும் ஆவர்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (05.11.2012) காலை 10.00 மணியலவில் கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ் இச்சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

வெள்ள நிவாரண உதவிகள் (2nd updates)

இதுவரையில் அரசிடமிருந்து எவ்வித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகளுக்கு பகல் உணவு அத்தனகல்ல பிரதேசசபை உறுப்பினர்களான நஜீம் நானா, மற்றும் அஷ்ரப் அவர்களின் தலைமையில் ஊர்மக்களின் உதவியோடு வினியொகிக்கப்பட்டது. அத்தோடு அவர்களுக்கான இரவு மற்றும் மறுநாள் உணவுகள் ஊர் பள்ளிவாசல்களினுாடாக வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் அறியத்தருகின்றன.

இன்று மாலை எமது பஸ்தரிப்பு நிலையம் இவ்வாறு கானப்பட்டது.


மேலதிக புகைப்படங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
www.kahatovita.tk