கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அரச அதிருப்தி எம்.பி.க்கள் ஜே.வி.பி.யுடன் பேச்சு

அரசின் போக்கு குறித்து விரக்தியுற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் எம்பி.க்கள் சிலர் புதிய கூட்டணியொன்றை அமைக்க ஜே.வி.பி.யுடன் பேச்சு நடத்தி வருவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்பி   தெரிவித்தார்.
 
எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து இக்கூட்டணி அமைக்கப்படவுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மீது நம்பிக்கை வைக்க முடியாது எனக் கருதும் அரசின் அமைச்சர்கள் சிலரும் எம்பிக்கள் சிலரும் புதிய கூட்டணிக்காக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இப்பேச்சுக்கள் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நாளை மறுதினம் நாடு திரும்பியதுடன் தொடர்ந்து இடம்பெறுமெனவும் விஜித ஹேரத் எம்பி தெரிவித்தார்.
 
 

0 comments:

Post a Comment