கடும் மழைகாரணமாக கஹட்டோவிட பிரதேசத்தில் வெள்ளம்

நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை 02.06.2014 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் தொடங்கிய பெரு மழை இன்று செவ்வாய்கிழமை காலை 11.00 மணிவரை தொடர்ந்து பெய்தது. இதனால் கஹட்டோவிட பஸ் தரிப்புப்பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இவ்வாறே ஓகடபொளை, உடுகொடை, திஹாரிய பிரதேசங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக எமக்கு அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment