கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

18 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட வான் மீட்பு

சித்தாண்டிப் பகுதியில் வைத்து 18 வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட வானொன்று கொழும்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தபோது நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)  கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேக நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த வான் 18 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளினால்  கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா, வெலிவேரியாப் பகுதியில் உள்ள  பாதையோரத்தில் வாகன விற்பனைச் சந்தை ஒன்றிலேயே இந்த வான் கைப்பற்றப்பட்டுள்ளது, 
இந்த வானை விற்பனைக்கு வைத்திருந்தததாகக் கூறப்படும் நபரும்  வாகனப் பதிவுப் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பித்திருந்த நபருமே கைதுசெய்யப்பட்டனர். 

இந்த வாகனத்தை விற்பனை செய்தவரை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர். 

மேலும், மட்டக்களப்பு பதில் நீதவான் டி.சின்னையா முன்னிலையில் நேற்றையதினம் (17 ஆஜர்படுத்தப்பட்ட இந்தச் சந்தேக நபர்கள் இருவரையும்  எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  பதில் நீதவான் உத்தரவிட்டார்.

கடற்படை வீரரான தமிழர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது 1996.08.11 அன்று ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டிச் சந்தியில் எல்.ரீ.ரீ.ஈ இனரால் கடத்தப்பட்டதாக ஏறாவூர் பொலிஸில் அன்று முறையிடப்பட்டிருந்தது.

வாகனத்துடன் கடத்தப்பட்ட குடும்பத்தினர்  பின்னர் எல்.ரீ.ரீ.ஈ இனரால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என்றும் கூறப்படுகின்றது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாகனப் பதிவுத் திணைக்களத்திலிருந்து பெயர் மாற்றுவதற்காக மெதகெதர லலித் பிரியங்க அபேகுணவர்தன என்பவர் கண்டியிலுள்ள போலியான முகவரியைக் கொடுத்து விண்ணப்பம் செய்துள்ளார்.




-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

0 comments:

Post a Comment