கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

டிசம்பர் மாதம் 6 நாட்கள் பூமி இருளாகும் வாய்ப்பில்லை வதந்திகளை நம்பாதீர் - நாசா!!

இருக்கிற அக்கப்போர்களுக்கிடையே இந்த 'NASA Confirms 6 Days of Total Darkness' - டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு என்றொரு பொய்ப்புரளியை கிளப்பிக்கொண்டு ஒரு கூட்டம்.
tempesta-solare-140801113501_big
நாசா அப்படியொரு செய்தியை வெளியிடவுமில்லை. அப்படி பூமி 6 நாட்களுக்கு இருளாவதற்கு சாத்தியமும் இல்லை. இதை நாசாவே அறிவித்துள்ளது.
நீங்கள் சமூக வலைத்தளங்களில் எதைப் பகிர்வதாக இருந்தாலும், பகிர முதல் பகிரும் மூலங்களை ஆராயுங்கள். எல்லா இணையத்தளங்களையும் நம்பாதீர்கள்.
இதோ பொய்யாக பரப்பப்பட்ட வதந்தி. உண்மை அறிந்தவர்கள் இந்த பொய்யையும் அறிந்து கொள்ளுங்கள். தயவுசெய்து உங்கள் நண்பர்கள் - உறவுகளுடன் உண்மை செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.
டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசிஇ துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார். நாசாவின் தலைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில், இந்த சூரிய மண்டலப் புயலால் பூமி இருளில் மூழ்கினாலும் எந்தவித பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது. இதற்கு யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. இது 250 வருடங்களில் ஏற்படப்போகின்ற மிகப்பெரிய சூரிய மண்டல புயலாகும். 216 மணித்தியாலங்கள் தொடர்ந்து இருள் நீடிப்பதால் ஆறு நாட்கள் பூமியில் மின் விளக்குகளுடனேயே செயலாற்ற வேண்டி வரும் என்று குறிப்பிட்டார். 

இது சம்பந்தமாக மேலதிக விபரங்களை நாசா இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென விஞ்ஞானி ஏர்ல் கொடோயில் தெரிவிக்கின்றனர். -

0 comments:

Post a Comment