கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கோழிக்கூட்டில் முஸ்லிம் தாய் அடைக்கப்பட்டார் என்பது சுத்தப் பொய்.....


கல்கமுவை, குடாவெவ பிரதேச முஸ்லிம் தாயொருவர், தனது வயதுமுதிர்ந்த தாயை கோழிக்கூட்டில் வைத்து வளர்த்ததாக கூறி குறிப்பாக பெரும்பான்மை இன ஊடகங்களால் சர்ச்சை ஒன்று உருவாக்கப்பட்டு, அது தமிழ் மொழிமூலமான ஊடகங்களும் மொழிமாற்றம் செய்து சமூகத்தில் பெரும் அசௌகரியத்தை விதித்திருந்தது. பொறுப்புவாய்ந்த எமது பணிகளால் சமூகத்துக்கு நலவே அன்றி கெடுதி இடம்பெற நாம் இடமளிக்க முடியாது. உண்மை நிலையை நேரில் சென்று அறிந்து வருவதற்காக சென்றிருந்தேன். அது ஒரு இட்டுக் கட்டப்பட்ட பொய் என்பதை அப்பிரதேச மக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மீள்பார்வைக்காக தெளிவுபடுத்தினர். 
– அனஸ் அப்பாஸ் –

0 comments:

Post a Comment