கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்குமான போக்குவரத்து் குறுக்கு வழி 16ம் திகதி திறப்பு!



யாழ்ப்பாணத்துக்கும், கொழுமபுக்குமான போக்குவரத்துத் தூரத்தை 120 கிலோமீற்றரால் குறைக்கும் ஏ 32 வீதி ஊடான போக்குவரத்து எதிர்வரும் 16ம் திகதியுடன் சாத்தியப்படவுள்ளது.

ஏ 32 போக்குவரத்துப் பாதையில் காரைதீவையும், புநகரியையும் இணைக்கும் 288 மீற்றர் நீளமான கேரதீவு-சங்குப்பிட்டிப் பாலம் எதிர்வரும் 16ம் திகதி திறக்கப்பட்டதும், ஏ 32 வீதி ஊடான போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய நிலை ஏற்படும்.

இதன்மூலம், யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார், புத்தளம் ஊடாகக் கொழும்பை அடைய முடியும் என்பதால், போக்குவரத்துத் தூரம் 120 கிலோமீற்றரால் குறைவடைந்து, பயண நேரமும் 3 மணித்தியாலத்தால் குறையும்.
ஐக்கிய இராச்சியம் வழங்கிய 800 மில்லியன் ரூபா கடனுதவி மூலம், கடந்த 8 மாத காலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த 288 மீற்றர் நீளமான சங்குப்பட்டிப் பால நிர்மாணப் பணிகள் தற்சமயம் நிறைவடைந்து, எதிர்வரும் 16ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதனைத் திறந்து வைக்கவுள்ளார்.
இது வட பகுதி மக்களுக்கான ஜனாதிபதியின் தைப்பொங்கல் பரிசு என்றும், தொடர்ந்து 17ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அவர் அறிவிப்பார் என்றும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment