கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஒரு வைத்தியரின் பார்வையில் கஹடோவிட்டா பெண்கள்!



சமீபத்தில் மருத்துவச் சிகிச்சைக்காக சென்றிருந்த வேலையில் மருந்துகளைக் கொடுத்துவிட்டதன் பின்னர் அவரது உரையாடல் இவ்வாறு தொடர்கிறது.

எமது ஊரைச்சேர்ந்த பெண்களில் 90 வீதமானோருக்கு மன அழுத்தம் உள்ளதாக குறுப்பிடுகிறார். ஏனென்றால  வைத்தியரிடம் சிகிச்சை பெற அநேகமான பெண்கள் வருகை தருகின்றதாம். ஆனால் அவர்களுக்கு உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருக்கும். ஆனால் உடல் நோயைக் குறிப்பிடுகின்ற அவர்களில் உடலில் எவ்வித நோயகளுக்கும் அறிகுறி இல்லை. அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண் கூடு.
அழுத்தம் என்பது கவலை, ஏக்கம், கோபம், பதைபதைப்பு அல்லது பயம் கலந்த உணர்வுகளாகவும் இருக்கும். ஒரு வேலையை செய்து முடிக்க அல்லது வெற்றிபெற அழுத்தி நெருக்கி வைத்துள்ள நிலை இது. சில வேளைகளில் மன அழுத்த நிலை ஒருவனுடைய வாழ்வையே சீர்குலைக்கும் அளவுக்குப் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணலாம். சில வேளைகளில் மன அழுத்த நிலை ஒருவனை சிந்திக்க, ஆக்கபூர்வமாக செயற்பட, கடினமாக உழைக்க, ஒரு சாதனையை செய்து முடிக்க தூண்டலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான மன அழுத்த நிலைகள் ஏற்படுகின்றன.

அநேகமான பெண்கள் குடும்ப்ப் பிரச்சினைகள், கணவன்- மனைவி, பிள்ளைகளால் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கலாம். வேறு சிலர் வருமை, மற்றும் பல பிரச்சினைகளுக்குல் பாதிக்கப்பட்டுக்கொண்டுறிக்கலாம்.
இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு சில ஆலோசனைகளையும் முன்வைத்தார். பெண்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக தலைதூக்கி செயற்படவேண்டும். எந்தப் பிரச்சினையையும் எதிர்கொண்டு முன்னேறிச் செல்ல துணிவு வேண்டும். இவ்வாறு அவரது அறிவுரைகள் தொடர்ந்தன….
எது எவ்வாறு இருந்தாலும் எமது ஊரில் வாழும் பெண்கள் மன அழுத்த்த்தால் பாதிக்கப்பட்டால் எதிர்கலத்தில் மிளர இருக்கும் சமுதாயமும் பாதிக்கப்படும் என்பதில் எள்ள்ளவும் சந்தேக மில்லை. ஏனென்றால் ஒரு பெண்ணால் ஆக்கவும் முடியும், ழிக்கவும் முடியும் என்பார்களெ அல்லவா! (அல்லாஹ் நாடினால்)

என்ன தீர்வு?
  • எப்போதும் மன மகிழ்சியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். மன உளைச்சலைத் தரக் கூடிய சூழ் நிலையை தவிர்க்க முயற்சிப்பதோடு நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும்.
  • நெருக்கமான நட்பையும் மற்றவர்களுடன் சிறப்பான நல்லுறவையும் வளர்த்துக் கொள்ள நேரத்தை செலவிடுங்கள். மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களது தவறுகளைப் பெரிதுபடுத்தாது அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அவர்களும் உங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் அல்லவா? மற்றவர்களையும் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள பழகினால் மன அழுத்தம் வெகுவாக குறைவடையும்.
  • மன அமைதி நாடுவார் இறைவழிபாடு, தியானம் போன்றவைகளில் ஈடுபடுவதோடு உடல் இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் போக்கும் தியானப் பயிற்சிகள், யோகாசன முறைகளையும் முறையாக கற்றுக் கடைப்பிடிப்பதும் மன அமைதியைத் தரும்.

விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்வதோடு நீங்கள் உங்கள் நண்பர்களிடம் காட்டும் இணக்கத்தையும் கனிவையும் வீட்டிலுள்ளவர்களிடம் காட்டுங்கள். மன அழுத்தம் எப்படிப்பட்ட தீய விளைவுகளை ஏற்படுத்தினாலும் அவற்றை தடுக்கும் வழி உங்கள் கையில்தான் உள்ளது.

எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்” (65:3)

அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனிடம் நம்பிக்கைவைத்து, அவனுக்கே பொறுப்பையும் சாட்டி நாம் அதன் பிரகாரமே வாழ்வோமானால் எவ்விதமான கஷ்டங்கள் நம்மை நோக்கி வந்தாலும் அல்லாஹ் அவற்றை இலகுவாக்கிவைப்பான்.
இதனால் நமது எதிர்கால சமுதாயம் உடல், உள வழிமையோடு எதிர்காலத்தில் சாதிக்கப் பிறந்தவர்களாக மாறிவிடுவார்கள் என்பது நிச்சயம்.

பகிர்ந்தமைக்கு நன்றி (ஜதாகல்லாஹ்)

1 comments:

Anonymous said...

யாரது? நம்ம சன்ஜீவ டொக்டரா இது..

Post a Comment