கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மூதூரில் சட்டவிரோத விஹாரை அமைக்கும் முயற்சி முறியடிப்பு

எஸ்.எச் .அமீர் :

மூதூர் பிரதேச செயலகப் பரிவிலுள்ள ஜபல் நகர் பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதியில் சட்ட விரோதமாக விஹாரையொன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. சேருவில பிரதேசத்தைச்சேர்ந்த 20 பேர்கள் அடங்கிய ஒரு குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை ஜபல் நகர் மலைப் பகுதியில் அத்துமீறி பிரவேசித்து விஹாரையொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேலை மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்த்தர்கள் அதிகாரிகள் பலர் ஒன்று கூடி அக்குழுவினரை அவ்விடத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

தாம் உரிய அனுமதிபெற்றுத்தான் விஹாரை அமைக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறி, உரிய இடத்தை விட்டு நகர மறுத்த அக்குழுவினரிடம் பெற்ற அனுமதியை காண்பிக்குமாறு கோரியபோது அனுமதி எதுவும் பெற்றிராதது தெரிய வந்ததைத்தொடர்ந்து அக்குழுவினர் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இம்மலைப்பகுதியில் 10 வருடங்களுக்கு முன்பு சிலர் சில சமய சின்னங்களை வைத்தநிலையில் வேறு சிலர் அதனை அகற்றிய போது மூதூர் பிரதேசத்தில் இனக்கலவரம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment