கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அல்லாஹ்வின் இல்லத்தில் புத்தர் சிலை...?


திருகோணமலை வெள்ளை மணல் - கருமலை ஊற்று மீள்குயேற்ற கிராமத்தில் பள்ளிவாசல் ஒன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கடற்படையின் ஆதிக்கம் நிலவும் இப்பிரதேசத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 60 வருடங்களுக்கும் மேலாக பள்ளிவாசல் இருந்து வந்துள்ளது. முஸ்லிம் கலாசார திணைக்களத்திலும் குறித்த பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த பள்ளிவாசலிலேயே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பில் மூதூர் பிரதேச சபை தலைவர் டாக்டர் ஹில்மி, யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தகவல் தருகையில், குறித்த பிரதேச பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச முஸ்லிம்கள் சிலர் எங்களிடம் முறைப்பாடு செய்திருந்தனர். நாங்கள் அந்தப் பிரதேச பள்ளிவாசலுக்கு சென்று பார்த்தபோது அவ்வாறான புத்தர் சிலையை காணவில்லை.

குறித்த பள்ளிவாசலை முஸ்லிம் பிரமுகர்கள் பர்வையிட வருகிறார்கள் என்றால் அந்த பள்ளிவாசலிருந்து புத்தர் சிலையை எடுத்து ஒளித்துவைத்து விடுகிறார்கள் என பிரதேச முஸ்லிம்களிடம் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

இதேவேளை இதுதொடர்பில் மூதூர் பிரதேச சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் அஷ்ஷெய்ஹ் ஜெஸ்ரி தகவல் தருகையில், குறித்த பள்ளிவாசலுக்கு பதிலாக மற்றுமொரு இடத்தில் பள்ளிவாசலை கட்டித்தர சிலர் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இருந்தபோதும் தற்போது அங்கு தொழுகை நடைபெறுவதில்லை. குறித்த பகுதி முஸ்லிம்கள் அயல் பகுதிகளுக்கு சென்றே தொழுகையில் ஈடுபடுகிறார்கள். புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பள்ளிவாசலுக்கு அருகாமையில் 120 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் என்றார்.

அதேவேளை கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை தளபதி கொலம்பகே பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை மறுத்ததாகவும் அஷ்ஷெஹ் ஜெஸ்ரி மேலும் குறிப்பிட்டார். இந்த விவகாரம் முஸ்லிம் அரசில் தலைமகளுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment