கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

புது யுகம் காணுமா எமதூரின் இரு கண்ணும்?


எமது ஊரின் கல்வி வளர்ச்சியில் இரு கண்களாய் இருந்து உழைகை;கும் இரு இடங்களே பத்ரியா மற்றும் பாலிகா பாடசாலைகள் ஆகும். மிக நீண்ட காலமாக ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக கல்வி நிடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.சில பாடங்களிற்கு தொண்டர் ஆசிரியர்களின் சேவையைப் பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. சென்ற கிழமை வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரிய நியமணத்தின் மூலம் பாலிகா மற்றும் பத்ரியா பாடசாலைகளிற்கு போதியளவு ஆசிரியர்கள் கிடைக்கப் பெற்றமை மகிழ்ச்சிக்குறிய விடயமாகும். பத்ரியாவிற்கு 5 ஆசிரிய ஆசிரியைகளும் பாலிகாவிற்கு இரண்டு ஆசிரியைகளும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீண்டகாலமாக நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினை தீர்ந்துள்ளது எனலாம். எனவே எதிர்வரும் காலங்களில் பாடசாலைப் பெறுபேறுகளில் சிறந்த முன்னேற்றங்களைக் காணலாம் என பலரும் எதிர்பார்க்கின்றனர். 

0 comments:

Post a Comment