கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட தவ்ஹீத் பள்ளியில் றமழான் நிகழ்வுகள்

எதிர்வரும் றமழானை முன்னிட்டு கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலினால் அரைநாள் பயான் நிகழ்ச்சியொறு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வரை நாள் நிகழ்வில் றமழானை எவ்வாறு சிறப்பாகக் கழிக்க வேண்டும் என்ற வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதலாவது உரை அஷ்செய்க் இம்தியாஸ் மதனி அவர்களினால் இலங்கையில் சீயாக்களின் ஊடுறுவல் சம்பந்தமான தலைப்பில் நிகழ்த்தப்பட்டது. இவ்வுரையைத் தொடர்ந்து முஜாஹித் பின் றஸீன் அவர்களால் றமழான் சம்பந்தமான விளக்கவுரையொன்று இடம்பெற்றது. அவ்வுரையைத் தொடர்ந்து மௌலவி நவ்பல் அவர்களின் உரை இடம்பெற்றது.

கஹட்டோவிட தவ்ஹீத் சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வரலாறு காணாத மக்கள் தொகையினர் கலந்து பயன்பெற்றனர்.

3 comments:

Anonymous said...

நோன்பு வருதல்லே இனிமேல் கலக்கல்தான்

Anonymous said...

emathu ooraiyyum shiyaakkal ooduruvi ullaarkalaa, appadiyaanal avarkali adaiyyaalam kaanuwathu eppadi

Anonymous said...

வரலாறு காணாத மக்கள் தொகையினர் கலந்து பயன்பெற்றனர். saathichchitteenga

Post a Comment