கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கருத்துவேறுபாடுகள் வேற்றுமைகளாக மாற்றப்படுகிறது: உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

லண்டன் நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்- வேற்றுமையின் மத்தில் ஒன்றுமையை நாம் தேடவேண்டும் , எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்ப்பாக முடியாது, அப்படி உருவாக்கவும் முடியாது. கருத்து வேறுபாடுகள் ஒரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிமுக்கும் இருக்கும் அன்புக்கும் , சகோதரத்துவதுக்கும் தடையாக வருவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார் .

பிரிட்டனில் இயங்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கலாச்சார பேரவையின் 13 ஆவது ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் ஒற்றுமை எமது வாழ்கையில் வரவேண்டுமாக இருந்தால் இரண்டு விடயங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும் அப்போது எமது வாழ்கையில் முழுமையாக ஒன்றுமை வரும் ஒன்று கருத்து வேறுபாடுகளை வேற்றுமையாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இரண்டு கருத்து வேறுபாடுகளின் போது இது எனது கருத்து இந்த கருத்து சரியானது என்று நான் கருதுகிறேன் ஆனால் உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன் என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் .

முஸ்லிம் உம்மா இஸ்லாத்தின் அகீதாவில் கருத்து முரண்பாடு கொள்ளவில்லை, அடிப்படையான விடயத்தில் கருத்து முரண்பாடு இல்லை ஆனால் சட்டங்கள் , உப சட்டங்கள் என்று வரும்போது கருத்து வேறுபாடுகள் தோன்றுகிறது .ஈமான் ஆறு அம்சங்களை கொண்டது என்பதில் கருத்து வேறுபாடு எவருக்கும் இல்லை , தொழுகையை தினமும் ஐந்து நேரம் தொழவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு எவருக்கும் இல்லை, ஆனால் தொழுகையில் தக்பீர் எங்கு கட்டுவது என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது , குனூத் விடயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது.

இஸ்லாத்தின் அடிப்படையான அம்சங்களில் கருத்து முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது . காதியானிகள் கொண்டிருப்பது இஸ்லாத்தின் அடிப்படை மீதான கருத்து முரண்பாடு அது இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் கருத்து முரண்பாடு அவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அனுமதிக்க பட்ட கருத்து வேறுபாடுகள் விடயத்தில் சண்டை ,சச்சரவு எதுவும் வரமுடியாது, இதில் நாம் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் . இந்த கருத்து வேறுபாடுகள் ஒரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிமுக்கும் இருக்கும் அன்புக்கும் , சகோதரத்துவதுக்கும் தடையாக வருவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது .

இமாம்கள் கருத்து வேறுபாடுகளை வேற்றுமையாக பார்க்கவில்லை ஆனால் சிலர் கருத்து வேறுபாடுகளை வேற்றுமையாக ஆக்கியுள்ளார்கள். கருத்துவேறுபாடுகள் வேற்றுமைகளாக மாற்றப்படுகிறது. அது ஒரு பிளவாக , பிரச்சினையாக மாற்றப் பட்டுள்ளது. கருத்து வேறுபாடுகள் உண்மையில் பிளவுகளுக்கும், பிரச்சினைகளுக்கும் உரிய விடயமல்ல. அல்லாஹ் கருத்துவேறுபாடுகளை ஒரு பிரச்சினையாக பார்கவில்லை .இஸ்லாத்தை நன்கு படித்த உலமாக்களும் கருத்துவேறுபாடுகளை ஒரு பிரச்சினையாக பார்கவில்லை. ஆனால் இடையில் இருக்கும் சிலர் அதை ஒரு பிரச்சினையாக மாற்றியிருக்கிறார்கள் .

ஏன் கருத்து முரண்பாடுகள் தோன்றுகின்றது என்பதை இப்படி சொல்லலாம் ”வித்தியாசமான அறிவுத்தரம் கொண்டமனிதர்கள் + அல் குர்ஆன் ஆஸ் ஸுன்னாஹ்= கருத்து வேறுபாடுகள்” . வித்தியாசமான அறிவுத்தரம் கொண்டமனிதர்கள் அல் குர்ஆன் , ஆஸ் ஸுன்னாஹ்வை பார்க்கும் போது அவர்களின் அறிவுத் தரத்திற்கு ஏற்ப பல்வேறு கருத்துகளை பெறுகிறார்கள் உதாரணமாக தொழுகையில் தக்பீர் கட்டியது முதல் சலாம் கொடுக்கும் வரை 200 கருத்துவேறுபாடுகள் இருக்கிறது. இது எப்படித் தோன்றியது இமாம்கள் குர்ஆன் , ஸுன்னாஹ்வை படித்ததன் , விளங்கியதன் ஊடாக வந்ததுதான் ஆனால் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த இமாம்கள் தமக்குல் சண்டையிட்டு கொள்ளவில்லை. ஒரு இமாம் தனது கருத்தை வலியுறுத்தி கூறுவார் அதே நேரம் மற்ற இமாமின் கருத்தை மதிப்பார் , பக்குவமாக, பண்பாடாக் கருத்து வேறுபாடுகளை அவர்கள் அணுகியுள்ளார்கள்.

கருத்து வேறுபாடுகளை முரண்பாடாக , பிளவாக எடுத்துகொள்ளாமல் இஸ்லாத்தின் எழுச்சிக்கு துணை புரியவேண்டும் , ஒன்றுமையான இஸ்லாத்தின் எழுச்சியைத்தான் இன்று துனூசியாவிலும், எகிப்திலும் கண்டோம். அதைத்தான் சிரியாவிலும் காணப் போகிறோம் என்றார் .

0 comments:

Post a Comment