கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ராஜகிரிய ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித் அச்சுறுத்தலினால் கடந்த மூன்று தினங்களாக மூடப்பட்டுள்ளது

ராஜகிரிய மாவத்தையில் அமைந்துள்ள ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித்கடந்த மூன்று தினங்களாக பெளத்த தேரர்களில் அச்சுறுத்தலினால் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக lankamuslim.org க்கு கிடைத்த தகவலை தொடந்து நாம் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவை தொடர்பு கொண்டோம் , குறித்த மஸ்ஜித் மூடப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திய அகில இலங்கை ஜம்இயதுல் உலமா இன்று சுபஹ், லுஹகர் தொழுகை கூட இடம்பெறவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டது.

இது தொடர்பாக செயலாளர் தாஸீம் மௌலவி எமக்கு வழங்கிய தகவல் . கடந்த -29.07.2012 அன்று இரவு ஜாமியுல் தாருள் ஈமானுக்கு வந்த வேறு பிரதேசத்தை சேர்ந்த பெளத்த தேரர்கள் தலைமையிலான குழுவினர் ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித்தை மூடுமாறு கோஷமிட்துள்ளனர். மஸ்ஜித் நிர்வாகம் இது ரமழான் மாதம் என்றும் இடம்பெறுவது விசேட இப்தார் நிகழ்வு என்றும் விளக்கியுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் கோஷமிட்ட பின்னர் களைந்து சென்றுள்ளனர் .

இதை தொடர்ந்து மஸ்ஜித் நிர்வாகத்தினர் மஸ்ஜிதுக்கு அண்மையில் இருக்கும் ராஜகிரிய விகாரையின் பெளத்த தேரரை சந்தித்து இந்த விடயம் தொடர்பாக பேசியுள்ளனர் . அதற்கு அவர் மஸ்ஜிதை தற்காலிகமாக ஒரு நாள் பூட்டுங்கள் நான் உங்களுக்கு நல்ல தீர்வொன்றை பெற்றுத்தருகிறேன் என்று கூறியுள்ளார். குறித்த தேரர் பிரதேச முஸ்லிம்களுடன் நன்றாக பழகுபவர் என்பதால் மஸ்ஜித் நிர்வாகமும் அதை கேட்டு ஒரு நாள் மூடிவிட்டு மறுநாள் அவரை சந்தித்தபோது அவர் தற்போது நிலைமை என் கையை விட்டு சென்றுவிட்டது என்று கையைவிரித்துள்ளார். (இதேவேளை குறித்த தேரர் முஸ்லிம்கள் சார்பாக பல முயற்சிகளை செய்தார் என்றும் தாஸீம் மௌலவி தெரிவிக்கிறார் )

இன்று மஸ்ஜித் மூடப்பட்ட நிலையில் இரண்டு நாட்டகள் கழிந்துள்ளது. மூன்றாவது நாள் இன்று மஸ்ஜிதுல் ஜாமியுல் தாருள் ஈமான் நிர்வாகத்தினர் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவை அணுகி மஸ்ஜித் மூட்டப்பட்டுள்ளமை தொடர்பாக முறையிட்டனர்.

இது தொடர்பாக உடனடியாக முஸ்லிம் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட அமைச்சர் பௌசியுடனும் தொடர்பு கொண்டு இதை அறிவித்துள்ளோம், அவர் எந்த வகையில் மஸ்ஜித் மூடப்பட்டுள்ளதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

குறித்த மஸ்ஜித் சட்டரீதியாக எல்லா ஆவணங்களையும் கொண்டுள்ளது . வக்பு சபையிலும் பதிவை கொண்டுள்ளது எந்த வகையிலும் மஸ்ஜித் மூடப்பட்டுள்ளதை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா ஏற்றுக்கொள்ளாது. மஸ்ஜிதை மீண்டும் திறக்கதேவையான உடனடி நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார் .
இந்த சம்பவத்தை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா வன்மையாக கண்டிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment