கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் – திருப்பி அனுப்பியது க்யூரியாசிட்டி!

செவ்வாய் கிரகத்தில் மனிதக் குரல் – நாசா அபார சாதனை!



க்யூரியாசிட்டி அனுப்பியுள்ள லேட்டஸ்ட் செவ்வாய் கிரக படம். இதனோடு சேர்த்து, மனிதக் குரல் பதிவையும் திருப்பி அனுப்பியுள்ளது… இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரலை பதிவு செய்திருக்கிறார்கள்!

பஸடேனா (கலிபோர்னியா): செவ்வாய்கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட இந்தக் குரல், செவ்வாய்கிரகத்திலிருந்து நாசாவுக்குத் திரும்பியுள்ளது.

இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் முதல் சுவடு குரல் மூலம் பதிவாகியுள்ளது. சந்திரனுக்கு அடுத்து மனிதக் குரல் பதிவான முதல் கிரகம் செவ்வாய்தான்.

க்யூரியாசிட்டி தனது டெலிபோட்டோ கேமிராவில் எடுத்து அனுப்பியுள்ள புதிய படத்துடன் இந்த குரலையும் நாசா வெளியிட்டுள்ளது. 57 கோடி கிமீ தூரம் பயணித்து, அதே துல்லியத்துடன் இந்த ஒலி திரும்பக் கிடைத்துள்ளது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

“க்யூரியாசிட்டி மூலம் பூமிக்கு நன்மைகள் கிடைக்கும். புதிய தலைமுறை விஞ்ஞானிகளும், விண்வெளி வீரர்களுக்கும் இது உந்துதாக இருக்கும். செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்த்தும் ஒரு விஷயமாக இது பார்க்கப்படுகிறது,” என நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன் தெரிவித்தார்.

இந்தக் குரல் பதிவு மூலம் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இன்னும் ஓரடி முன்னோக்கி சென்றுள்ளது க்யூரியாசிட்டி.


க்யூரியாசிட்டி எடுத்து அனுப்பியுள்ள இந்தப் படத்தில் செவ்வாயின் மிகப்பெரிய மலை தெரிகிறது. படம் எடுக்கப்பட்ட இடத்திலிருந்து அதன் உச்சி 16.2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

அடுத்த சில தினங்களில் க்யூரியாசிட்டி செவ்வாயில் குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்க உள்ளது. அப்போது இன்னும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

க்யூரியாசிட்டியின் நோக்கம் செவ்வாயின் தன்மையை ஆராய்வதுதான். அங்கு மனிதன் வாழும் சூழல் உள்ளதா என்பதைக் கண்டறிய இந்தக் கலம் அனுப்பப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அனுப்பிய படங்களில் அடையாளம் காண முடியாத ஒரு பொருள் பறப்பது போன்று வெளிச்சத்துடன் தெரிந்தது. எனவே அது வேற்று கிரகத்தவரின் பறக்கும் தட்டு ஆக இருக்கலாம் என கூறப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் நடத்தும் ஆய்வை வேவு பார்க்க வேற்று கிரகவாசிகள் வந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சிலர் சந்தேகித்தனர். அதை மெய்பிக்கும் வகையில் தற்போது கியூரியாசிட்டி அனுப்பிய மற்றொரு போட்டோவில் தடயங்கள் சிக்கியுள்ளன.

அதில் மனித கைவிரல் எலும்பு ஒன்றும் கூம்பு போன்ற வடிவம் கொண்ட மற்றொரு பொருளும் உள்ளது. மற்றொரு போட்டோவில் ஷூ இருப்பது போன்றும் பதிவாகி உள்ளது. எனவே அங்கு அவ்வப்போது வேற்று கிரகவாசிகள் நடமாட்டம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

யார் கண்டார்கள்… அடுத்த டெலிபோட்டோவில் செவ்வாய்கிரகவாசியின் குரலும் சேர்ந்து வருகிறதோ என்னமோ!


படங்கள்: நாசா – க்யூரியாசிட்டி



0 comments:

Post a Comment