கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஹிஸ்புல்லாஹ்வின் பலம்வாய்ந்த நிலைகள் மீதான ஐ.எஸ் (IS), ஜபாஃ அல்-நுஸ்ராவின் தாக்குதல்கள் !!

சிரிய துருக்கி எல்லையில் கொபானி நகரிற்கான குர்திஷ்களுடன் மூர்க்கமாக பொருதும் சமகாலத்தில் லெபனானில் தன் வேலையை காட்டியுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். லெபனானின் Arsal-லில் அமைந்துள்ள சிரிய அகதி முகாம்களை தீயிட்டு கொளுத்தி, முகாமில் உள்ள பெண்கள் குழந்தைகள் கண் முன்பாக ஆண்களை கைது செய்து, கொலை செய்து, சித்திரவதைகளிற்கு உள்ளாக்கி தங்கள் வீரத்தை நிலைநாட்டிய லெபனானிய இராணுவத்திற்கு பதிலடி கொடுப்போம் என இஸ்லாமிய அரசின் (Islamic State - IS) லெபனானிய எல்லைகளில் செயற்படும் கொமாண்ட் அறிவித்து இருந்தது. பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம், சித்திரவதைகள், தீமூட்டல் போன்றவற்றில் ஈடுபட்ட ஷியாக்களிற்கும்  (ஹிஸ்புல்லாஹ்) நாம் பாடம் கற்பிப்போம் என்று் அவர்கள் கூறியிருந்தனர். அதனை அவர்கள் நேற்று முன்தினம் (Oct. 5) செயலில் காட்டியுள்ளனர்.

Brital, Baalbek இரண்டு ஏரியாக்களுமே ஹிஸ்புல்லாக்களின் கோட்டைகள். இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் வீட்டுக்கு ஒரு போராளி ஹிஸ்புல்லாவில் இணைந்துள்ளான். இந்த இரண்டுமே சமகாலத்தில் Islamic State - IS போராளிகளினாலும் ஜபாஃ அல்-நுஸ்ரா போராளிகளினாலும் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளது. இங்கு ஷியாக்கள் செறிந்து வாழ்கின்றனர். லெபனானிய இராணுவ வீரர்கள் பலரும் இந்த ஊர்களில் உள்ளனர். 

ஈதுல் அல்ஹாஃ பண்டிகையை கொண்டாடும் முகமாக பல நூறு ஹிஸ்புல்லாஹ் கெரில்லாக்கள் சொந்த ஊரிற்கு வந்திருந்த தருவாயில் குளிர் காலத்தின் புலரி வேளையில் இந்த இடங்களை இலக்கு வைத்து ஐ.எஸ். மற்றும் ஜபாஃ அல் நுஸ்ரா போராளிகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இவர்களிற்கான உதவிக்கு ஹிஸ்புல்லாஹ் ஹை கொமாண்டினால் ரிடாலியேஷன் யுனிட்களை அனுப்ப முடியாமல் போயுள்ளது. காரணம் 80 விகிதமான ஹிஸ்புல்லாஹ் போராகளிகள் விடுமுறைக்காக விடுப்பில் சென்றிருந்தனர். 

ஹிஸ்புல்லாக்களின் குடும்பங்களை காப்பாற்ற லெபனானிய இராணுவம் அங்கு விரையும் என்பதனை எதிர்பார்த்திருந்தது போலவே வேகமாக வந்த லெபனான் டாஸ்க் போர்ஸஸை எதிர்கொண்ட ஜபாஃ அல்-நுஸ்ராவின் போராளிகள் சேதங்களை இவர்களிற்கு ஏற்படுத்தியுள்ளனர். ஐ.எஸ். இனது தாக்குதலில் ஷியா ஏரியாவில் நிலை கொண்டிருந்த ஹிஸ்புல்லாக்களும் பல இழப்புக்களை சந்தித்துள்ளனர். விடுப்பில் சென்ற பிராந்திய ஹிஸ்புல்லாக்கள் அனைவரையும் மீண்டும் உடனடியாக தங்கள் பொயின்ட்களிற்கு ரிப்போர்ட் செய்யுமாறு ஹிஸ்புல்லாக்களின் ஹை கொமாண்ட் கட்டளையிட்டுள்ளதுடன், லெபனானின் ஏனைய தங்களது நிலைகளையும் ரெட் அலெர்ட் பொசிஸனில் இருக்குமாரு பணித்துள்ளது. 

பஸர் அல் அஸாத்தின் இராணுவத்திற்கு துணை நின்றவை ரஷ்யா, ஈரான், ஹிஸ்புல்லாஹ். இவை போராளிகளின் தளங்கள் என ஊர்ஜிதமான இடங்களில் பல தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன. கடற்கரை நகரான ஹுஸைரில் எப்.எஸ்.ஏ.யுடனும் ஜபாஃ அல்-நுஸ்ராவுடனும் மிக மூர்க்கமான சண்டைகளை ஹிஸ்புல்லாஹ் நடாத்தியிருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலை கீழாக மாறி விட்டது. ஐ.எஸ். போராளிகள் ஹிஸ்புல்லாக்களின் கோட்டைக்குள் தங்கள் சப்பாத்துக்களை பதிக்க முனைந்துள்ளனர்.

ஐ.எஸ். இற்கும், ஜபாஃ அல்-நுஸ்ராவிற்கும் இடையில் பரஸ்பர படுகொலைகள் இடம்பெறுகின்றன என பேசிய மேற்கின் மீடியாக்களும், ஈரானின் செய்தி ஏஜென்ஸிகளும் இந்த தாக்குதலில் இரு அணிகளும் இரு முனைகளில் ஒரே நேரத்தில் மேற்கொண்ட தாக்குதல் பற்றி பெரிதாக செய்தி வெளியிடவில்லை. 

கைபா்தளம்.

0 comments:

Post a Comment