கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இங்கே பிரச்சனை ஒரு முதலமைச்சர் படைத்தளபதிக்கு ஏசியது அல்ல.

முதலமைச்சரினால் படை அதிகாரிக்கு
Just get out from here.
Idiot
If u don't know what is protocol is just get out from here.
Who the hell are you talk me?
முதலமைச்சரினால் ஆளுனருக்கு.
Even you governor you don't know the protocol.
I respect the excellency of the president of course
Much more than there is a protocol in this province and you should know about it. You should know the protocol.
Idiot என்ற வார்த்தையைத் தவிர வேறெதனையும் பெரிய தவறாக இங்கு குறிப்பிடமுடியாது.

அதுவும் தனது உரிமை அல்லது கௌரவத்துக்கு கேடு விளைவிக்க நினைத்த ஒருவருக்கு இந்த வார்த்தை பிரயோகமும் சாதாரணமானதே!
இங்கே பிரச்சனை ஒரு முதலமைச்சர் படைத்தளபதிக்கு ஏசியது அல்ல. இதற்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் விமல் வீரவன்ஷவின் கூட்டத்தை தடுக்கப்போன பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏசியது. பிக்குமார் தூசன வார்த்தைகளால் ஏசியது என எவ்வளவோ நடந்துள்ளது.
இங்கே பிரச்சனை ஒரு முஸ்லீம் ஒரு சிங்களவருக்கு ஏசியதுதான். இதையறியாமல் மு.காங்கிரசுடனுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை வைத்துக்கொண்டு நாமே அதை விமர்சிப்பதும் நமது சந்தர்ப்ப அரசியல் வாதிகள் இதில் குளிர்காய எத்தனிப்பதும் நமக்கு நாமே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் ஒரு செயலாகும்.
You should know the protocol என்று முதலமைச்சர் சொல்வதுதான் முழுப்பிரச்சனையுடைய சாராம்சம்.
Protocol என்பதன் நேரடி அர்த்தம் நெறிமுறை என்றிருந்தாலும் ஓர் அதிகார மட்டத்தில் இது இராஜதந்திர நிர்வாக கட்டமைப்பு நெறிமுறைகளைப் பேணுவதைக் குறிக்கும். தனது அதிகாரத்துக்குக் கீழுள்ள ஒரு மாவட்ட பாடசாலையில் அதுவும் ஒரு வெளிநாட்டுத் தூதுவர், மாவட்ட ஆளுனர் அழைக்கப்படும் வைபவத்தில் அம்மாகாண முதலமைச்சர் புறக்கணிக்கப்படுவது தெளிவான நெறிமுறைப் பிரழ்வே! அவர்களுக்கு அங்கே Protocol பற்றி முதலமைச்சர் பாடமெடுத்ததில் தப்பேதும் இல்லை
ஆனால் இங்கே மிகப்பெரிய துரதிஷ்டம் இதுவரை எமது பக்க நியாயங்களை சொல்ல ஒர் ஊடகத்தைப் பெற்றுக்கொள்ளாத ஊடக வங்கரோத்து நிலையில் இலங்கை முஸ்லீம் சமூகம் இன்னும் இருப்பதுதான். சில தசாப்தமாக முஸ்லீம்களுக்கான ஊடக அவசியம் பற்றி பலர் பேசினாலும் அது ஓர் எட்டாக்கனியாக இன்றுவரை இருப்பது வேதனைக்குறியது. சில வருடங்களுக்கு முன் (யுத்த காலத்தில்) இரவோடு இரவாக கொழும்பிலுள்ள வடபுல தமிழர்கள் இரானுவத்தினரால் வெளியேற்றப்பட்டனர். இதை அவர்களுக்கென இருந்த ஓர் ஊடகம் தூக்கிப்பிடிக்க கொழும்பிலிருந்து களைக்கப்பட்ட அத்தனை பேரும் 24 மணித்தியாலயத்திற்குள் கொழும்புக்கு அழைக்கப்பட்டார்கள். இன்றைய காலத்தில் ஊடகங்களுக்கு பெரும் பெரும் இராச்சியங்களையே கவிழ்க்க முடியம் என்பது அரபு வசந்தந்தின் போது நாம் கண்டதே!
நாம் பயன்படுத்தும் சமூக தல ஊடகங்களும் எமது தாய் மொழிக்குள்ளும் எமது சமூகத்துக்குள்ளும் சுருங்கியுள்ளதும்,
அதிலும் அதிகமாக பிக்கு பள்ளி கட்ட சீமேந்து வாங்கித்தருவதாக சொன்ன செய்தியும், முட்டையிலிருந்த அல்லஹ் என்ற எழுத்தும், KITO வை ஆராய்ந்து அதில் அல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்ததை கண்டுபிடித்த சாமர்த்தியங்களும் இன்னும் இயக்க சண்டைகளிலாலுமே தேங்கிப்போயுள்ளது வருத்தமளிக்கிறது.
Abdul Careem - Facebook

0 comments:

Post a Comment