கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பாலிகா அதிபரின் சேவை புகழ் பேசப்பட வேண்டும்.

இன்று நாட்டில் எந்தப்பாடசலையை எடுத்துக்கொண்டாலும் ஆசிரியர்கள் இல்லாத குறை எங்கும் பேசப்படுகின்றது.பாடசாலை விழாக்கள் நடைபெறுகின்ற போது அங்கு வருகின்ற பிரதம அதிதிகள் முன்னிலையில் தமது பாடசாலைகளில் ஆசிரியர்கள் போதவில்லை என்றும் குறிப்பாக கணித+விஞ்ஞான ஆசிரியர்களைப்பெற்றுதரவேண்டும் என்றும் அதிபர்களால் வேண்டப்படுவதை நாம் எந்த விழாக்களிலும் கேட்கக்கூடியதாக இருக்கின்றது.

அந்த வகையில் கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு முஸ்லிம் பெண்கள் பாடசாலையாக கஹடோவிட ''முஸ்லிம் பாலிகா வித்தியாலயம்'' அமைந்திருப்பது இப்பகுதி வாழ் முஸ்லிம்களுக்கு பெருமை தரக்கூடியதொன்றகும்.இப்பாடசாலையின் ஆரம்ப வரலாற்றை படிக்கின்ற போது இங்கு S.S.C.O/L தரம்வரை அன்றைய பெண்பிள்ளைகள் கல்வி கற்று பரீட்சைக்கு தோற்றி உள்ளனர்.

காலபோக்கில் அல்பத்ரியா வித்தியாலயமும் ஆரம்பிக்கப்பட்டவுடன் அங்கு வளங்கள் பெருகி மகாவித்யாலயமாக மாற்றப்பட்டது.பெண்கள் பாடசாலையில் கட்டடங்கள் போதாமல் போகவே அங்கு தரம் ஐந்து உடன் நிறுத்தி ஆறாம் வகுப்பினை அல்பத்ரியா மகாவிதியாலத்தில் தொடர நேரிட்டது.இதில் வேடிக்கை என்னவென்றால் ஒன்றுமே அறியாத பட்சிலம் குழந்தைகலை பிரித்து படிப்பித்து வயது வந்த பெண்பிள்ளை கலை ஆண்களும் பெண்களுமாக சேர்த்து வைத்துப்படிப்பிப்பதுமாகும்.

இங்கு பெண்களுக்கென்று தனியான பாடசாலையொன்று இருக்கின்ற போது நாம் ஏன் அப்பாடசாலையை உயிர்ப்பித்து அதில் தனியாகப் பெண்கள் படிக்கவழி செய்யக்கூடாது?இன்றைய்ய காலத்தின் தேவையாக இப்பாடசாலையில் ஆறாம் வகுப்பையும் தொடரலாம்.பெண்கள் தனியாஹப்படிப்ப்பதால் சமூக ஷீர்கேடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் வாய்ப்பளிக்கலாம் என்ற தன்னம்பிக்கையுடன் இப்பாடசாலையை மீண்டும் உயிர்பிக்க அரும்பாடு பட்டு உழைத்தனர் சில பெற்றோர்கள்.ஒரு சமூகத்தினர் எழுச்சியும் வீழ்ச்சியும் அவர்களின் ஒழுக்கத்தில் தான் தங்கியுள்ளது என்ற உண்மையை உணர்ந்து அதற்காக உழைத்த இவர்களின் முயற்சி வீண்போகவில்லை.

2010 இவ்வாண்டில் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை தொடர்ந்து கொண்டிருப்பதையும் காணக்கூடியதாய் உள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

இப்பாடசாலையில் பெண்கள் மாத்திரம் கல்வி கற்க வேண்டுமென நல்லுள்ளக்கொண்ட பெற்றோர்கள் விரும்பின்னாலும் கல்வித்தரத்தில் எந்தக்குறையுமில்லாத அல்-பத்ரியா மகாவிதியாலத்தை இரண்டாம் தரமாய் மதிக்கவோ, போட்டி பொறாமைப்படவோ ஒருவருமே விரும்பவில்லை. இந்தபெற்றோர்களின் ஆண்குழந்தைகள் அப்பாடசாலையில் கட்கின்றபோது இரண்டையும் இருகங்கலாகவே பாதுகாத்து வருகின்றனர்.

பாலிகா வித்யாலய ஆசிரியர்களின் முயற்சியும் ஊக்கமும் இம்மானவிகளுக்கு கல்வி வளர்ச்சிக்கு உந்து சக்தியாய் அமைந்து விட்டது. ஏனெனில் மாணவிகளின் இறுதியாண்டு தேர்வு புள்ளிகளை பார்கின்ற போது வகுப்பில் மூன்றாம் நிலையிலுள்ள மாணவியின் மொத்தப் புள்ளிகள் 995இல் நிற்கிறது.

இங்கு கணித-விஞ்சான பாடத்திற்கு நிரந்தர ஆசிரியர் இல்லாவிடினும் பாடவிதானங்கள் உரிய காலத்தில் முடிக்கப்பட்டு பயிற்சிகள் நிறுத்தத்துடன் பாடங்கள் போதிக்கப்பட்டுள்ளன. மிக அண்மையில் தரம் வாய்ந்த ஓர் அதிபரை பெற்றுக்கொண்ட இந்த ''பாலிகா முஸ்லிம் வித்யாலயம்'' நிரந்தரமான கணித+விஞ்சான ஆசிரியரைப்பெராதது மக்கள் மத்தியில் குறைபோல் தென்பட்டாலும் பரீட்சை பெறுபேறுகள் நிறைவைத்தருகின்றன. தகைமையுடன் திறைமையும் கொண்டவராக வந்து சேர்ந்த அதிபர் ஆபீசுடன் தன்னை நிருதிக்கொல்லாது கணித விஞ்ஞான பாட ஆசிரியரின் வெற்றிடத்தை தன்னால் நிரப்பிட முடியும் என்ற துணிவோடு 7-8-9 ஆம்வகுப்புகளுக்கு சிறந்த முறையில் கற்பித்து வருகிறார்.

ஆம், அதிபர்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமா????

நம்மைத் தொடர்புகொண்டு இந்த ஆக்கத்தை அனுப்பிய சகோதரிக்கு நன்றி. மேலும் உங்களிடமிருந்து இதுபோன்ற ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.

5 comments:

Anonymous said...

சிறந்த முன்மாதிரி, தகவல்களை பகிர்ந்துகொண்ட உங்களது வலைசேவைக்கு நன்றி...
வாழ்த்துக்கள்

Sister Site said...
This comment has been removed by a blog administrator.
Blog Editor said...

மேலே உள்ள கருத்துரை இந்த ஆக்கம் தொடர்பாக அமையவில்லை என்பதன் காரணமாக, இங்கிருந்து நீக்கப்படுகிறது.

NOLIMIT said...

assalamu alikum, how ever ladies should study seperatly thats must. no more questions to in. im wishing this web hosters to put real news abt our village without taking any sides.

thank you
assalamu alikum

CNC Job Offers said...

Thank for the comment of NOLIMIT, we would like to give real news in our best INSHALLAH.

Post a Comment