கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மூன்றாம அணியொன்று உருவாகலாம்!


நடந்து முடிந்த தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா அணி அதிர்ச்சித் தோல்விக்குள்ளாகியதைத் தொடர்ந்து கஹட்டோவிட அரசியல் அரங்கில் பரவலான ஒரு சோர்வும், மக்களிடையே நம்பிக்கையின்மையும், ஆட்கொண்டிருக்கும் இத்தருணத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் என்ன செயவது என்ற வினாவை சிலர் வெளிப்படையாகவும், பலர் மௌனமாகவும் கேட்டுக் கொள்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த முடிவைத்தான் மக்கள் இப்பொதுத் தேர்தலும் கைக்கொள்வார்கள் என்று கூறினாலும் இம்முறை அதிரடியான சில மாற்றங்கள் கஹட்டோவிட அரசியற் களத்தில் நிகழ வாய்;ப்புள்ளதாக எதிர்வு கூறப்படுகின்றது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொன்சேகாவின் புதிய அனியின் சின்னமான கிண்ணத்திற்கே இம்முறை வாக்களிக்க உள்ளதாகவும் அதற்காக சிரமேற்கொண்டு செயற்பட மூன்றாம் அணியொன்று தோற்றம் பெறவிருப்பதாகவும், இதன் முதற்படியாக இவ்வணியின் அங்குரார்பணத்தை முன்னிட்டு ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹெரத் எம்.பி யை கஹட்டோவிடாவிற்கு வரவழைக்கவுள்ளதாகவும் உத்தியோகப் பற்றற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எதுவாயினும் பெரும்பாண்மை வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸ{க்கே என்ற நிலையை முழுமையாக மாற்ற முடியாது. ஆனாலும் மேற்சொன்னது போன்ற சில மாற்றங்கள் ஏற்படும் என்பதை முழுமையாக நிராகரி;க்கவும் முடியாது.

0 comments:

Post a Comment