கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பேராசிரியரும் நடிகருமான டாக்டர்.பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்

கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்தவர்.தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத்தரும் தாசன் என்றவார்த்தையை இணைத்துக்கொண்டவர். தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர்.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது அப்துல்லாஹ்(அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக்கொண்டார்.இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக்குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது:” இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக்கொண்டுள்ளது. நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச்செய்தேன்.அதில் இஸ்லாத்தைத்தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல. குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது. நான் நாத்திகக்கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன்.இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்.” என்றார். டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார். பின்னர் மதீனாவும் செல்வார்.அல்லாஹ் அவருடைய நல்லச்செயல்களை பொருந்திக்கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக! என பிரார்த்திப்போம்.

தகவல் மின்னஞ்சல் மூலம் அபூ முஸ்அப்

3 comments:

Anonymous said...

அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் பேரருள் பலர் இஸ்லாத்தை நோக்கி மீண்டுகொண்டிருக்கிறார்கள். ஆமினா அசில்மி, டேனியல், மற்றும் பெரியதாஸ் ஆகியோர் இஸ்லாத்திற்குள் மீண்டதை இத்தளத்தினூடாக வாசிக்கக் கிடைத்தது. இவர்கள் அனைவரும் கூறிய பொதுவான ஒரு கருத்துதான் தாம் புனித குர்ஆனைப் படித்து இஸ்லாத்தை அறிந்து கொண்டோம் என்பது. குர்ஆனை விளங்க முடியாது, அதனை விளங்க ஆழ்ந்த அறபு மொழித்திறமை அவசியம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யும் பொய்யாகளுக்கு இதனை ஒரு பாடமாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். இதனைப்பார்த்துவிட்டாவது இவர்கள் தங்களது முட்டாள்தனமான கருத்துக்களை கைவிடுவார்களா..? அல்லாஹ் நம்மனைவருக்கும் நோ்வழி காட்டுவானாக!

மொஹமட் அஸ்பர் said...

அல்ஹம்து லில்லாஹ்...
சிந்திப்பவர்களின் கடைசிப்புகலிடம் இஸ்லாமாகத்தான் இருக்க முடியும். அரைகுறைகளுக்கு கடைசி வரை புலம்பல்தான்.
இறைவன் நேர்வழியில் செலுத்த நாடியவர்களை யாராலும் வழி கெடுக்க இயலாது. ஆமினா அசில்மி, டேனியல், பெரியார்தாசன் இவர்களுக்கு ஹிதாயத் அருளிய அல்லாஹ் அவர்களின் மூலம்,மேலும் பலருக்கு ஹிதாயத் அருள போதுமானவன்....

Anonymous said...

நேற்று எமதூரில் கமத்தைக் கந்தூரி நடைபெற்றது. அதைப்பற்றி ஒன்றம் எழுதவில்லையே…1

Post a Comment