கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மத்ரஸா நிதி என்ற பேரில் கப்பம் கோரப்படுகிறதாம்?

வழமையாக கந்தூரிக் காலத்தில் ஓவ்வொரு வருடமும் கந்தூரிப் பெட்டிக்கடைகளிலிருந்து நிதி சேகரிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. இம்முறை இவ்வாறு சேகரிக்கப்படும் நிதியை பாதிபிய்யா மத்ரஸாவுக்காக வழங்குவதாகக் கூறி நிதி சேகரிப்பிலீடுபவர்கள் அதிக நிதியைத் திரட்டுவதற்காக பெட்டிக்கடைக்காரர்களுக்கு இடங்களைப் பெற்றுக் கொடுப்பதில் கடுமையாகப்பாடுபடுகின்றார்களாம். இடம் வழங்குவதில் சர்ச்சையை உண்டுபண்ணும் இட உரிமையாளர்களுடன் தகராறிலும் ஈடுபடுகிறார்களாம். இவ்வாறு சேகரிக்கப்படுகின்ற நிதிகளுக்கு இதுவரை ஒழுங்கான கணக்கு, வழக்குகளுமில்லையாம். இதனால் பல கடைக்காரர்கள் நிதிகொடுக்கத் தயங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு நிதி சேகரிப்பை மேற்கொள்வோர் பற்றியும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. எதுவாயினும், நம்பிக்கையானவர்களைத்தான் நிதி சேகரிக்கும் வேளைகளுக்கு அமர்த்த வேண்டும். இல்லாத விடத்து இதை விட மோசமான பின் விளைவுகள் ஏற்பட இடமுண்டு.

0 comments:

Post a Comment