கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பிரான்ஸில் முகத்திரை அணியத் தடை அமுல் ; இரு பெண்கள் கைது

பிரான்ஸில் முகத்திரை அணிந்து பொது இடங்களில் நடமாடுவதற்கான தடை இன்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது. இத்தடையை ஆட்சேபிக்கும் விதமாக முகத்திரை அணிந்துசென்ற இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.




ஐரோப்பாவில் இத்தகைய தடையை விதித்த முதலாவது நாடு பிரான்ஸ் ஆகும். அங்கு பொது இடங்களில் முகத்திரை அணிந்து செல்பவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை முகத்திரை அணிந்து செல்ல எவரேனும் கட்டாயப்படுத்தினால் அந்நபருக்கு 30,000 யூரோ அபராதமும் இருவருட காலம் வரையான சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

இத்தடை அமுலுக்கு வந்த சில மணித்தியாலங்களில் தலைநகர் பாரிஸில் இரு பெண்கள் 'நிகாப்' அணிந்து சென்றனர். அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 32 வயதான கேன்ஸா ட்ரைடர் எனும் பெண் ஊடகங்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

எனினும் அவர்கள் முகத்திரை அணிந்தமைக்காக கைது செய்யப்படவில்லை எனவும் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியமைக்காகவே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் அலெக்ஸி மார்சன் தெரிவித்தார்.

இவ்விருவருக்கும் முகத்திரை அணிந்தமைக்காக அபராதம் விதிக்கப்பட்டதாக என்பது தெரியவரவில்லை.

இதேவேளை வர்த்தகரான ரஷிட் நேக்கஸ் என்பவர் தானும் தனது நண்பியொருவரும் ஜனாதிபதி நிகலஸ் சார்கோஸியின் மாளிகைக்கு முன்னால் நிகாப் அணிந்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டதாக ஏ.எவ்.பியிடம் கூறியுள்ளார்.

'பொலிஸார் எமக்கு அபராதம் விதிக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அவர்கள் அபராதம் விதிக்க விரும்பவில்லை' என அவர் கூறினார்.

அத்துடன், முகத்திரை அணிந்து செல்லும் பெண்கள் அபராதம் செலுத்துவதற்கு உதவுவதற்கான நிதியமொன்றை ஆரம்பிப்பதற்காக 20 யூரோ பெறுமதியான தனது சொத்துக்களை விற்கத் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
 

0 comments:

Post a Comment