கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மீண்டும் ஜாஹிலிய்யத்தா?



தரீக்காக்கள், இயக்கங்கள், அமைப்புக்கள் எனப் பல்வேறு வழிகளினூடாக மார்க்க விழுமியங்கள் போதிக்கப்படும் ஒரு ஊரே எமது கஹட்டோவிடாவாகும். ஆரம்ப காலத்தில் மார்க்க விடயங்களில் தெளிவற்ற நிலை காணப்பட்டமையினால் வீடுகளில் நடைபெறும் விழாக்கள், நிகழ்வுகள் போன்றவற்றில் மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு அம்சங்கள் நடைபெற்று வந்தன. எனினும் காலப்போக்கில் எமதூரில் ஏற்பட்ட மார்க்க விழிப்புணர்வின் விளைவாக பல ஜாஹிலிய்யக்காலப் பழக்க வழக்கங்கள் மறைந்து இஸ்லாமிய மரபுகள் பின்பற்றப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஊரின் அதிகமான இளைஞர்கள் மார்க்கத்தில் ஈடுபாடு காட்டி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புகைத்தலை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று  பாரிய ஒரு செயற்திட்டத்தையும் மேற்கொண்டதை உதாரணமாகக் கொள்ளலாம்.
எனினும் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் வாலிபர்கள் சிலரின் நடவடிக்கைகள் எமதூரில் ஏற்பட்டுவரும் இஸ்லாமி மாற்றங்களி்ற்கு வேட்டு வைக்குமுகமாக இருப்பதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மையில் ஊரில் நடைபெற்ற இரண்டு திருமண நிகழ்வுகள் விமர்சனங்களிற்கு உள்ளாகியிருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதுமற்றுமின்றி வாலிபர்களிடையே அதிகரித்து வருவரும் போதைப் பொருள் பாவனை போனறன  வாலிபர்களை சிறந்த முறையில் வழிநடாத்த பாரியதொரு செயற்திட்டம் வேண்டி நிற்பதை  உணர்த்துகின்றது.

1 comments:

யதார்த்தி said...

அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பே ஓர் உண்மையை சூசகமாக சொல்கிறது. அதாவது ஒரு
காலத்தில் ஜாஹிலியத்தில் இருந்த நம்மூர் பின்பு இஸ்லாமிய மறுமலர்ச்சி
ஏற்பட்டு மீண்டும் ஜாஹிலியத்தை நோக்கி பயணிக்கிறதா? என்பதே அது.
இதைத்தான் நீங்கள் பொத்தாம் பொதுவாக தெளிவற்ற நிலை மறைந்து
இஸ்லாமிய மரபுகள் பின்பற்றப்பட்டு வந்தது என்று சொன்னாலும் யதார்த்த
நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.
ஜாஹிலியா காலத்தை பொறுத்த வரை கொலை,கொள்ளை,விபச்சாரம் போன்ற
தீமைகள் மாத்திரமல்லாது பலதெய்வ வழிபாடு, சிலை/கப்ரு வணக்கம், அல்லாஹ்
அல்லாதவர்களிடம் பிரார்த்தனை போன்ற இஸ்லாமிய அகீதாவுக்கு வேட்டு
வைக்கும் இழி செயல்களும்தான் இருந்தது.
இதே போன்றதொரு காலத்தில் தான் ஊரில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த
சில சகோதரர்கள் இந்த ஜாஹிலியத்திலிருந்து மக்களை கொஞ்சமாக
விலக்கினார்கள்-இருள் நீங்குகிறது.
இவ்வாறே இஸ்லாத்தை அல்லாஹ்வுக்காக நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய அதே
பாணியில் எடுப்பாக எடுத்தியம்பிய இக்கொள்கைவாதிகள் அண்மைக்காலமாக
அவர்களின் கொள்கையில் தடம்புரண்டதே இந்த தலைப்பு வர முக்கிய காரணம்
என நினைக்கின்றேன்.
தெளிவாகச் சொன்னால் தனியிடங்கண்டு கொண்ட ஆரம்ப காலங்களில் இருந்த
கொள்கைப்பிடிப்பும், தியாக மனப்பான்மையும் இன்று மழுங்கடிக்கப்பட்டு
பள்ளிக்கு வந்தால் போதும் என்றளவுக்கு இவர்களின் நன்மையை ஏவி தீமையை
தடுக்கும் பணி சுருங்கிவிட்டது என்பதே நிதர்சனம்.
அத்துடன் ஆரம்பங்களில் அல்லாஹ்வை மாத்திரம் நம்பி செய்த
இந்தப்பணி இன்று மனித செல்வாக்கிற்கு முதலிடம் கொடுக்கும்
அவல நிலை இங்கே மட்டுமல்ல முழு இலங்கையிலும் ஆங்காங்கே
தாண்டவமாடுகிறது என்பதே உண்மைக்கொள்கை வாதிகளின் ஆதங்கம்.
நீங்கள் குறிப்பிடுவது போல் இயக்கங்கள், அமைப்புக்கள் பல இருந்தாலும்
நபிகளாரின் வழிமுறையைக் கையாளாமல் தனி மனித சித்தாந்தங்களை
தமது இயக்க கோட்பாடாக மாற்றிக்கொண்ட காரணத்தினாலேயே
இத்தீமைகள் களைந்து எடுக்கப்படுவதில் இவர்களால் எந்தவொரு பாதிப்பையும்
ஏற்படுத்த முடியவில்லை.
இந்நிலை தொடர்ந்தால் புகைத்தல், திருமணம் மட்டுமல்ல பொருளாதார(வட்டி, கடன்..),
சமூக ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான எல்லாமே ஜாஹிலிய்யத்தை நோக்கி
மீளும். இவர்களும் அப்படியே இயக்கத்தை வளர்த்துக்கொண்டிருப்பார்கள்.
எவ்வாராயிலும் "உங்களில் சிலர் நன்மையை ஏவி தீமையை தடுத்துக் கொண்டே
இருப்பார்கள்" என்ற அல்லாஹ்வின் கூற்றை கொள்கையாக கொண்ட சிலர்
ஏற்கனவே புறப்பட்டு விட்டனர் என்பதை நினைக்கும் போது கொஞ்சம் திருப்திதான்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
yatharthi127@googlemail.com

Post a Comment