கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஒத்திகையில் ஈடுபட்ட இரு கிபீர் விமானங்கள் கஹடோவிடாவிக்கு அன்மையில் வீழ்ந்து நொறுங்கின

இன்று காலை 9.30 மணியளவில் கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு ஒத்திகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு கபீர் விமானங்களில் இரண்டு ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகி எமது ஊருக்கு அருகாமையிளுள்ள நெல்லிகஹமுள்ள மற்றும் உடுதுத்திரிபிடிய ஆகிய இடக்களில் பாரிய தீப்பிழம்புடன் விழுந்துள்ளது.

விமானங்களை செலுத்திய இரண்டு விமானிகள் விமானத்திலிருந்து வெளித்தள்ளும் கருவியை பயன்படுத்தி தப்பித்துக்கொண்டுள்ளளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு விமானியின் உடல் விபத்து நடந்த இடத்துக்கருகாமையில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ள்ளதாக அறியக்கிடைக்கிறது.

தகவல் அறிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்கஷ, மற்றும் பாராளுமன்ற உருப்பினர் சரண குனவர்த்தன ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உடனடியாக விஜயம் செய்து அதனை நேரில் பார்வையிட்டதை எம்மால் நேரடியாக்க் காணமுடிந்த்து.
சம்பவத்தில் விமானப் படையின் லெப்டினன் பதவிநிலை வகிக்கும் மொனாஷ் பெரேரா என்பவரே உயிரிழந்துள்ள நிலையிலும் வஜிர ஜயகொடி என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து நடந்து ஒரு சில நிமிடங்களில் எம்மால் எடுக்கப்பட்ட நேரடியான புகைப்படங்களை இங்கே பார்வையிடலாம்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்கஷ





பாராளுமன்ற உருப்பினர் சரண குனவர்த்தன







3 comments:

Anonymous said...

ஓவ் யாரய்யா இந்த தழின்பன்.. படுத்துறான்யா பாடு... நல்லா போய்க்கிட்டிரந்த தளத்தை குழப்பிட்டான்யா...

suren said...

thanks for sharing photos with us. I hope you were the first publisher photos regarding this accident than verakesari, and other tamil medias..

றிகாஸ் said...

தகவல்களை உடனுக்குடன் பொடோக்களுடன் தருவது உங்கள் தளம்தான். சிறந்த தளம். தமிழ் பற்றின் விமர்சனங்களினால் சோர்ந்து வடாதீர்கள்..... தொடர்க சேவை..!

Post a Comment