கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சாரதி அனுமதிப்பத்திர புள்ளி வழங்கும் முறைமை இன்று முதல் அமுல்



சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புள்ளி வழங்கும் முறைமை நாளை முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும்... என மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் எச்.எஸ்.ஹரிச்சந்திர தெரிவித்தார்.சாரதிகள் வாகனம் செலுத்தும் போது விடும் தவறுகளுக்காக அவற்றுக்கு ஏற்றவாறு புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. மொத்தப்புள்ளிகள் 22 எனக்கொண்டே இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.இதனைத் தொடர்ந்து புள்ளிகளை இழக்கும் சாரதிகளின் அனுமதிப்பத்திரம் ஒருவருடத்துக்கோ அல்லது அதற்கும் அதிகமான காலத்துக்கோ ரத்துச்செய்யப்படவுள்ளன. முதல்கட்டமாக இப்புள்ளி வழங்கும் முறைமைக்காக பாரிய வாகன விபத்துக்கள் மற்றும் குடிபோதையுடன் வாகனம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment