கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மதினாவில் உள்ள நபிகள் நாயகத்தின் கல்லறையை இடிக்க சவுதி அரேபிய அரசு திட்டம்?

"தான் இறந்த பிறகு தன்னை புதைக்கும் இடத்தில் கல்லறை எதுவும் கட்டக் கூடாது, யாரும் அங்கு வணங்கக் கூடாது என்று நபிகள் நாயகமே கூறியுள்ளார்
மதினாவுக்கு வரும் மக்கள் நபிகள் நாயகத்தின் கல்லறையில் பிரார்த்தனை செய்யத் துவங்கியுள்ளார்களாம். இதையடுத்து தான் இணை வைக்கும் குற்றத்தை தடுக்கவே சவுதி அரசு நபிகள் நாயகத்தின் கல்லறையை இடிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன._செய்தி
இறைவேதத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை வேறு விதமாக உல்டா செய்து மக்களை குழப்புவது யூத பயங்கரவாத ஊடகங்கள் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
மதினாவில் உள்ள நபிகள் நாயகத்தின் கல்லறையை இடித்துவிட்டு அவரது எலும்புகளை யாருக்கும் தெரியாத இடத்தில் புதைக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த இன்டிபென்டன்ட் என்ற செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது போன்ற வதந்திகளை இணையதளங்கள் வழியாக பரப்புவது யூத பயங்கரவாதிகள் மட்டுமே என்பது புலப்படுகிறது.
கல்லறைகளை வணங்கும் இடமாக மாற்றிவிடாதீர்கள். என்னுடைய கல்லறையை திருவிழா கொண்டாடும் இடமாக மாற்றி விடாதீர்கள், என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். " நபிமார்கள் எந்த இடத்தில் மரணிக்கின்றனரோ அதே இடத்தில் அவர்கள் அடக்கமும் செய்ய வேண்டும்" என்றும் கூறியுள்ளார்கள்.
நபிகளாருடைய சொந்த ஊர் மக்காப் பகுதியாக இருந்தாலும் அவர்கள் மதினாவில் தான் மரணித்தார்கள், அதே இடத்தில் அடக்கமும் செய்யப்பட்டார்கள் .மக்கா நகரில் உள்ள மக்கள் நபிகளாரின் மீது பாசத்துடன் இருந்தார்கள், நான் மிகவும் நேசிக்கும் இடம் மக்காதான் என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூறி இருந்தாலும், ஹிஜ்ரத் (நாடு துறந்து) வெளிய்ரும் போது கூட மக்காவை திரும்பி திரும்பி பார்த்தவண்ணம் நடந்தார்கள் என்று வரலாறுகளில் நாம் கண்டாலும் மரணித்த பிறகு அவரகளின் உடலை சொந்த ஊரான மக்கா நகருக்குக் கூட கொண்டு வரவில்லை
திருடினால் கை வெட்டு, கொலைக்குக் கொலை தான் தண்டனை என்ற சட்டங்களை யூத பயங்கரவாதிகள் முதல் உலகமே "மனித உரிமை " பெயரால் எதிர்த்தாலும் இன்று வரை அச்ச்சட்டத்தை நிறைவேற்றி வரும் சவூதி அரசு கல்லைறை விஷயத்தில் சரியாக கடைபிடிக்கும் என்பதை விளங்க வேண்டும்
நபிகளார் (ஸல்) அவர்கள் மட்டும் தான் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள் ளார்களா என்பது கூட வதந்தி பரப்பும் ஊடகங்களுக்கு தெரியவில்லை, நபிகளார்(ஸல்) அவர்களுக்கு பக்கத்திலேயே உமர் (ரலி) அபூபக்கர் சித்தீக் (ரலி) அனைவரும் அங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
நபிகளார் (ஸல்) மற்றும் அவர்கள் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் தோழர்களின் இடங்களும் இடிக்கும் அளவிற்கு கல்லறையாக கட்டப்பட்டு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. வதந்தி பரப்புபவர்களோ "கல்லறைகளை இடித்து விட்டு வேறு இடத்துக்கு மாற்றப்போகிறார்கள்" என்று கூறுவதை வைத்தே யூத பயங்கரவாதிகள் குழப்பம் செய்கிறார்கள், வேறு ஏதோ ஒரு பயங்கரவாதத்தை நிகழ்த்த சவூதியை வைத்து காய் நகர்த்துகிறார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிகிறது.
உண்மை செய்திகளை விட வதந்திகள் தான் வேகமாக பரவும் எனவே இதுபோன்ற இணையதள வதந்திகளுக்கு இடமளிக்காமல் இருப்பதே நலம்.அதிலும் ஊடகங்களில் பரவிவரும் வதந்திகளுக்கு வதந்திகளின் தலைமையாக இருக்கும் யூத பயங்கரவாத ஊடகங்களின் தகவல்களை தவிர்த்துக் கொண்டால் உலகம் அமைதி பெரும்.
Anbu Chelvan

0 comments:

Post a Comment