கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இலங்கையின் போர் வீரன் சரத் பொன்சேகாவின் சிறை வாழ்க்கை : தற்போதைய நிலவரம்

கடந்த புதன்கிழமையன்று நள்ளிரவு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பலத்த பாதுகாப்புடன் கொழும்பு கடற்படை முகாமில் இருந்து வெலிக்கடையில் தனியாக அமைக்கப்பட்டுள்ள “எஸ்” அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்
இதன்படி சரத் பொன்சேகா, வெலிக்கடை சிறைச்சாலையின் 0-22032 இலக்க கைதியாக பதிவு செய்யப்பட்டார்.

தாம் அணிந்திருந்த தேசிய உடையை கழற்றிய அவர் சிறை கைதிகளின் ஆடையை அணிந்துக் கொண்டார்.

அத்துடன் சீமெந்து தரையில் ஒரு தலையணையில் படுத்து அவர் நித்திரை கொண்டார்.

அடுத்த நாள் அதிகாலை 5 மணியளவில் அவர் ஏனைய கைதிகளை போல எழுந்து பார்த்த போது அவருக்கான மலசல கூடத்தில் நீர் இருக்கவில்லை.

இதன் காரணமாக நடந்து சென்று தண்ணீரை எடுத்து வந்து தமது காலை கடன்களை அவர் கழித்தார்.

இதன் பின்னர் தமக்குரிய பீங்கானுடன் ஏனைய கைதிகளை போல நீண்ட வரிசையில் நின்று காலை உணவை பெற்றுக் கொண்டார்.

காலை உணவாக அவருக்கு சோறும் தேங்காய் சம்பலும் தரப்பட்டது.

சிறை அதிகாரிகள் வந்து அவரின் இருப்பை உறுதிசெய்து கொண்டனர்.

வைத்தியர் ஒருவர் அவரை பரிசோதித்தார்.

தையல்காரர் ஒருவர் வந்து அவருக்கான ஆடைகளுக்கான உரிய அளவீடுகளை எடுத்துச் சென்றார்.

பகல் வேளையில் மீண்டும் உணவுக்காக பீங்கானுடன் வரிசையில் நின்று சரத் பொன்சேகா தமது உணவை பெற்றுக்கொண்டார்.

அதில் சோறும் சிறிய மீனும், கீரையும் இருந்தன.

இதன் பின்னர், பிற்பகல் 2 மணிக்கு சரத் பொன்சேகா அவரின் அறைக்கு சென்றார்.

இதனையடுத்து இரவு 7 மணிக்கு இரவு சாப்பாட்டை முடித்து விட்டு சரத் பொன்சேகா தமது வழமையான நித்திரைக்காக அறைக்கு திரும்பினார்.

போரில் தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிக் கொண்டமைக்காக நாடாளாவிய ரீதியில் சிறப்பிக்கப்பட்ட வீரர் இன்று சிறையில் கைதியாகியுள்ளதாக ஆங்கில செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பிற்பகலில் தமது கணவரை பார்க்க சென்ற அனோமா பொன்சேகா, வெளியில் வந்த பின்னர் தமது கணவரின் தேசிய உடையை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.

30 வருட போரை தோற்கடித்தமைக்காக தமது கணவருக்கு தரப்பட்ட பரிசு இதுவென அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலவின் தகவல் ஒன்றின்படி, இராணுவ நீதிமன்றத்தின் மூலம் 4500 வீரர்கள் தண்டனை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, பொலநறுவைக்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஹபரன ரத்தன தம்ம தேரர் கேட்ட கேள்வி ராஜபக்சவை அதிர்ச்சிக்குள்ளாகியது.

சரத் பொன்சேகாவினால், ராஜபக்சவினருக்கு நடந்தது என்னவென்பதை நாடு அறிந்திருக்குமாக இருந்தால் அவருக்கு வழங்கிய தண்டனை சரியானதாக இருந்திருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

அதாவது சரத் பொன்சேகாவினால் ராஜபக்சவினருக்கு என்ன நடந்தது என்பதை நாடு அறியவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச தாம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை என தெரிவித்தார்.

இந்தநிலையில் இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கும் போது நீதிபதி சட்டத்தரணியான பெர்ணாண்டோ, சரத் பொன்சேகாவிடம், நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? எனக் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா தமக்கு எதிரான தீர்ப்பை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனக்குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிரான தீர்ப்பு இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்படவில்லை எனக்குறிப்பிட்ட அவர் இது ஒரிடத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்தை ஆங்கிலத்தில் தெரிவித்த அவர் சிங்களத்தில் நான்காம் ஈழப்போரின் நிலைமையை விபரித்தார்.

இதன் போது போரில் 5200 படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன் 27 ஆயிரம் பேர் காயமடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளில் ஆயிரக்கணக்கானோரை கொன்று பலரை சிறைப்பிடித்து அதிலும் பிரபாகரனை கொன்று பயங்கவாரத்தை முறியடித்த நிலையில் தாம் சிறை வாசம் அனுபவிக்க செல்வதாக அவர் தெரிவித்தார்.

தாம் அநீதிக்கு எதிராக போராடப்போவதாக குறிப்பிட்ட அவர் அதில் வெற்றிப்பெறப்போவதாகவும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment