கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வாசகா் சிந்தனைக்கு!

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
'நிச்சயமாக அனுமதிக்கப்பட்டது, தெளிவாக உள்ளது. நிச்சயமாக தடுக்கப்பட்டவையும் தெளிவாக உள்ளது. இவ்விரண்டுக்குமிடையே சந்தேகமானவைகளும் உள்ளன. இவற்றை மக்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள். சந்தேகமானவற்றை விட்டு ஒருவன் தவிர்ந்து கொண்டால், அவன் தன் மார்க்கத்தையும், கண்ணியத்தையும் காப்பாற்றிக் கொண்டவராவார். சந்கேமானவற்றில் ஒருவன் மூழ்கிவிட்டால், அவன் தடுக்கப்பட்டவற்றிலும் மூழ்கி விடுவான்.
அவன்; வேலியைச் சுற்றி (ஆடுகளை) மேய்க்கும் மேய்ப்பாளன் போலாவான். அந்த வேலியையே அவை மேய்ந்து விடவும் கூடும். அறிந்து கொள்ளுங்கள்! ஒவ்வொரு அரசனுக்கும் ஒரு வேலி உண்டு. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் வேலி என்பது, அவனது தடை செய்யப்பட்டவைகளாகும்.

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சரியாகிவிட்டால், உடல் முழுதும் சரியாகி விடும். அது கெட்டுவிட்டால், உடல் முழுதும் கெட்டுவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அதுதான் 'இதயம்'

 (புகாரி, முஸ்லிம்)

0 comments:

Post a Comment