கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

காதலர் தினத்தன்று கடற்கரையில் பாலியல் உறவுக்குப் பின்னரே சவூதி இளவரசர் பணியாளரை அடித்துக் கொன்றுள்ளது அம்பலம்

லண்டனில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஒன்று " தி லேண்ட்மார்க் ". இந்த ஹோட்டலில் தனது பணியாளர் ஒருவருடன் கடந்த பெப்ரவரி மாதம் வந்து தங்கினார் சவுதி இளவரசர் சவுத் அப்துல்ஆசிஸ் பின் நசிர் அல் சவுத். சவூதி மன்னரின் கொள்ளுப் பேரன் இவர்.

 சில நாட்களுக்கு முன்னர் இளவரசர் ஹோட்டல் லிப்ட்டில் தன்னுடன் வந்த பணியாளரை அடித்த காட்சிகள் சி.சி.டி.வி கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் வெளியிடப்பட்டு இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் உடன் வந்த பணியாளரும் இவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதும் பாலியல் ரீதியான விடயங்களுக்காகவே அவரை அடித்துக் கொன்றுள்ளர்ர் எனபதும் தெரிய வந்தது.

 கடந்த வாரம் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டது. அடித்துக் கொல்லப்பட்ட பணியாளரின் கனனத்தில் கடித்த தடங்கள் இருப்பதாகவும் , இது வரையிலும் அது சரியாக கவனிக்கப்படவில்லை என்பதும் இன்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இதையடுத்து மருத்துவ நிபுணர்களின் உதவியை நீதிமன்றம் நாடிய போது மூர்க்கத்தனமான பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தால் இது போன்று நடந்திருக்கலாம் என Dr.மார்ட்டின் நீதிமன்றத்தில் கூறினார்.

 ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை இளவரசர் மறுத்து வந்தார். இன்று மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்ட போது காதலர் தினத்தன்று இளவரசர் பணியாளருடன் கடற்கரையில் உறவில் இருந்தது அம்பலமானது. இன்று அண்ணளவாக ஒன்றரை மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு இளவரசர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மையே என்பதை நீதிபதி அறிவித்தார்.

 இந்த வழக்கில் சவுதி இளவரசருக்கு நீண்ட காலத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இதன் மூலம் இளவரசரின் சொகுசு வாழக்கை முடிவுக்கு வருமென்றும் நம்பப்படுகிறது. சவுதி இளவரசர் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்த குற்றத்திற்காக அல்ல.

 ஓரினச் சேர்க்கை இஸ்லாமிய விதிமுறைகளின் படி தவறாகக் கருதப்படுவதால் நாடு திரும்பினால் மரண தண்டனை கிடைப்பது அநேகமாக நிச்சயமாகி விட்டது. சட்டத்தின் பிடியில் இருந்து எவ்வளவு பெரிய ஆளானாலும் தப்ப முடியாது என்பதையே சவுதி இளவரசர் வழக்கு காட்டுவதாக நிபுணர்கள் கருத்துக் கூறுகின்றனர்.

0 comments:

Post a Comment