கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இலங்கையில் ஷீயாக்களின் ஊடுறுவல் - கடந்த றமழானில் பல இடங்களில் ஷீயா நிகழ்ச்சிகள்.

இலங்கையில் ஷீயாக்களின் ஊடுறுவல் மிக அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. சமூக சேவைகள், அறிவு வழிப்பபுணர்வு போனற் போர்வைகளிலேயே இவர்கள் எமது சமூகத்திற்குள் தலைகாட்டியுள்ளனர்; இவர்களின் இத் தந்திரமான நடவடிக்கைகளினால் பல முஸ்லிம்கள் ஈமனை இழந்து குப்ரின் பக்கம் சென்றுகொண்டிருக்கின்றனர். மூளைச் சலவைக்குட்பட்ட பலர் எமது உயிரிலும் மேலான நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களையும், அவர்களின் தோழர்களைப் பற்றியும் தப்பான எண்ணங்களை கொண்டுள்ளனர். இவர்களின் மூளைச்சலவை பாமரர்களை மட்டுமின்றி பல புத்திஜீவிகளையும் தவறான கொள்கையின்பால் இட்டுச்சென்றுள்ளது. கடந்த றழானில் ஷீயாக்களால் இலங்கையில் மேற்கொண்ட நிகழ்ச்சிகளின் அறிக்கையொன்று அவர்களின் இணையத்தளமொன்றில் வெளியிடப்பட்டிருந்தன. அவ்வறிக்கையின் ஒரு பகுதியின் தமிழாக்கத்தை எமது வாசகர்களிற்காகத் தருகின்றோம்.
சர்வதேச ஷீயா அமைப்பினால் கடந்த றமழானில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமூக சேவைகள்.
01.    இலங்கையிலுள்ள எமது ஷீயாக் குடும்பத்தனர் றமழானில் அர்களிற்கு வழங்கிய நிதியுதிவ்ககாக நன்றி தெரிவித்துள்ளனர். அவர்கள் எமக்காக துஆச்செய்கின்றனர். சர்வதேச ஷீயாக்களின் சம்மேளனம் அவர்களிற்கு எதிர்காலத்திலும் பல உதவிகளை நல்கும்.
02.    இவ்வருடம் இலங்கையின் வத்தளை, மாபோலை, றாகமை, அக்பர் டவ்ன், வனவாசலை, ஹ{னுபடிய, பேரலன்த, கிரிஉல்ல, குருணாகலை, சீதுவை, நீர்கொழும்பு, சிலாபம், கற்பிட்டி, புத்தளம், வாளைச்சேனை, நுவரெலிய ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளது. வாழைச்சேனையில் 35 குடும்பங்களிற்கு றமழான் கால உணவுப்பொதிகளையும் வினியோகித்துள்ளது.
03.    சிலாபம், கற்பிட்டி, கிரிஉல்ல, குருணாகல, சீதுவ, நீர்கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு உணவுப் பொதிகள் வினியோகிக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து சகோதரர் ஹாரிஸ் ஜலீல் என்பவரால் றமழானின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஒரு உரையும் இடம்பெற்றது.
04.    நுவரெலியப் பகுதியில் மூன்று குடும்பத்திற்கு 03 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. வறுமையில் வாழும் இவர்களிற்கு தமது வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருளாதாரத்தைத் தேடிக்கொள்வதற்கு இத்தையல் இயந்திரங்கள் பெருதும் உதவும் என அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இத்தையல் இயந்திரம் வழங்கப்பட்ட குடும்பத்தில் ஒரு குடும்பத்தின் வீடு தீப்பிடித்து எறிந்து முற்;றாக சேதமடைந்துள்ளது. தையல் இயந்;திரம் கையளிப்பு வைபவத்தினைத் தொடர்ந்து சகோதரர் ஹாரிஸ் ஜலீல் அவர்களாலும் சகோதரி ஸவீன் ஜலீல் என்பவராலும் இரு உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இவ்வாறு ஷீயாக்களின் ஊடுறுவல் மிக வேகமாக எமது சமூகத்திற்குள் கால்பதித்துள்ளது. இவ்வாறான விடயங்களை அலட்டிக்கொள்ளாமல் பெரிய தலைமைகள் மௌனம் சாதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அண்மையில் வஹ்ஹாபிகள் இலங்கையில் பயங்கரவாதத்தைப் பரப்புவதாக பரபரப்பாக மீடியாக்களில் பேசப்பட்டது. எமது முஸ்லிம்களாலே இப்பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறான விடயங்களை மீடியாக்களின் பேசுபொருளாக்கிய இவர்களின் கண்களிற்கு எமது அகீதாவிற்கே வேட்டுவைக்கும் இச்சீயாக்கிளின் ஊடுறுல் காணாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

1 comments:

பழைய காதிரியன் said...

வஹ்ஹாபிகள் பயங்கரவாதத்தைப் பரப்புவதாக கருத்து வெளியிட்டவர்கள் சூபி அறிஞர்கள் என்பதை பத்திரிகைகளில் தெளிவாக நாம் வாசித்தோம். நிச்சயமாக இவா்கள் சீயா விடயத்தை கிளர மாட்டார்கள். ஏனெனில் சூபிக்கள் வழிவந்த தரீக்காக்களுக்கும் சீயாக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சீயாக்களின் பிண்ணனியில்தான் தரீக்காக்கள் உருவாகின.

Post a Comment