கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நூர்தீன் மசூர் இன்றுகாலை மாரடைப்பால் காலமானார்

See full size imageஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நூர்தீன் மசூர், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் இன்றுகாலை மாரடைப்பால் காலமானதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஹஸன் அலி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


48 வயதான நூர்தீன் மசூர் கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு முதற் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

2001 ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான அவர் 2001 முதல் 2004 ஆம் ஆண்டுவரை வன்னி புனர்வாழ்வு உதவிகளுக்கான அமைச்சராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலிலும் அவர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

0 comments:

Post a Comment