கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு அருகில் இயங்கிய ஆடம்பர விபசார விடுதி முற்றுகை!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு அருகில்-அதி உயர் பாதுகாப்பு வலய பிரதேசத்தில் இயங்கி வந்த ஆடம்பர விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் இன்று காலை முற்றுகை இட்டுள்ளார்கள்.

லிபேட்டி பிளாசா கட்டிட தொகுதியின் எட்டாவது மாடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இவ்விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளது. முற்றுகையின்போது விபச்சாரிகள் ஐவர் அங்கு கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் ஐரோப்பியர்கள்.

மூவர் உள்நாட்டவர்கள். விபசார விடுதியின் உரிமையாளர் எட்டாவது மாடியில் உள்ள இக்கட்டிடத்தில் மிகவும் நுட்பமான முறையில் மாற்றங்களை செய்து இருக்கின்றார்.

இக்கட்டிடத்துக்குள் இருந்து படிக்கட்டுக்கள் மூலமாக ஏழாவது மாடியில் உள்ள இன்னொரு கட்டிடத்தை சென்றடைகின்றமைக்கான இரகசிய பாதை ஒன்றை உருவாக்கி இருக்கின்றார்.
 
ஏழாவது மாடியில் உள்ள கட்டிடத்தில்தான் விபச்சாரம் இடம்பெற்று வந்திருக்கின்றது. பொலிஸாரால் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அதிரடி நடவடிக்கைகளில் இம்முற்றுகையும் ஒன்று ஆகும்.

0 comments:

Post a Comment