கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வீதி விபத்தில் இருவர் பலி


மீரிகம பஸ்யால வீதியின் மல்லாவ சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் நாம்புளுவயைச் பிறப்பிடமாககொண்ட இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்துள்ள இருவர்களதும் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு (05.12.2010) நாம்புளுவ, திஹாரி மைய்யவாடிகளில் நடைபெறுமென்று அறியப்படுகின்றது.


வேகமாக வந்த காரும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து ஏற்ட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கர வண்டி வீதியின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சமயம் கார் சாரதியின் தவறின் காரணமாகவே இந்த விபத்தது ஏற்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்தார்.
கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அத்தனகல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment