கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இந்தியாவை தொடர்ந்து அவமானப்படுத்தும் அமெரிக்கா...


2003-ம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் அமெரிக்காவின் டல்லஸ் விமானநிலையத்தில் வைத்து ஆடைகளை அவிழ்த்து பரிசோதிக்கப்பட்டார்.


2009 ஜூலை 22-ல் முன்னாள் இந்திய ஜனாதிபதி எ.பி.ஜெ.அப்துல் கலாம் அமெரிக்காவின் காண்டினண்டல் ஏர்லைன்சில் ஷூவை அவிழ்த்து பரிசோதனை நடத்தப்பட்டார்.

2009 மே 6-ல் மலையாள சினிமா நடிகர் மம்மூட்டி நியூயார்க்கில் கென்னடி விமானநிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டார்.

2009 ஆகஸ்ட் 14-ல் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நியூஜெர்ஸி விமானநிலையத்தில் வைத்து இரண்டு மணிநேரம் விசாரிக்கப்பட்டார். முஸ்லிம் பெயர்தான் அதற்கு காரணம்.

2010 செப்டம்பர் 27-ல் இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல் ஷிகாகோ விமானநிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டார்.

2010 டிசம்பர் 4-ல் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் அமெரிக்காவின் மிசிசிபி விமானநிலையத்தில் வைத்து உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
 
மாத்யமம்

0 comments:

Post a Comment