கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தலையிருக்க உடலைக் காணவில்லையாம் - சாறலங்காவில் சம்பவம்

சாரலங்காப் பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த ஆட்டின் தலையை வைத்துவிட்டு உடலைத்திருடிச் சென்ற சம்பவமொன்று கஹட்டோவிட பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டின் உடலைத் திருடியவர்கள் சாரலங்காப் பிரதேசத்தைச் சேர்ந்த சில கட்டாக்காளி இளைஞர்கள் எனவும் அவர்கள் தற்போது தலைமறைவாகி இருப்பதாகவும் அறியக் கிடைக்கின்றது. பொதுவாக நகர்ப் புறங்களில்தான் இவ்வாறான திருட்டுக்கள் நடைபெறுவது வழமையென்றாலும் எமதூரைப் போன்ற கிராமங்களில் இவை நடைபெறுவது மிகுந்த ஆச்சரியத்திற்குரியது எனபதுடன் இவ்வாறானோர் இனங்காணப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். சாரலங்காப் பிரதேசத்திலுள்ள குறிப்பிட்ட சில இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை களவு போன்ற படுபாதகச் செயல்களில் ஈடுபடுவது வெளிப்படையான விடயமாயினும் இதற்கெதிராக தகுந்த சட்ட நடவடிக்கைகள் இதுவரையிலும் முறையாக முன்னெடுக்கப்படவில்லை எனபதுவே மனதுக்கு வேதனையாகவுள்ளது.

0 comments:

Post a Comment