கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் 162 பயணிகளுடன் மாயம்

இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் 162 பேருடன் இன்று காலை மாயமானது.
இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் 162 பயணிகளுடன் மாயம்
அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக அதிகாரியான ஹாதி முஸ்தபா கூறுகையில்;

இன்று அதிகாலை 5:20 மணிக்கு சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501, காலை 6:17 மணியளவில் ஜகார்தா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பிலிருந்து விடுபட்டது என கூறியுள்ளார். இந்த விமானத்தில் 155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களும் இருந்ததாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

விமான கட்டுப்பாட்டு மையத்துடன் விமானத்தின் தொடர்பு விடுபடுவதற்கு முன், தனது வழக்கமான பாதையில் போவதை விட்டு, வேறு பாதையில் போக அனுமதி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விமானம் தொடர்பை விட்டு விலகும் போது கலிமந்தனுக்கும் ஜாவா தீவுகளுக்கும் இடையே ஜாவா கடலில் மேலே பறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

காலை 8.30 மணிக்கு சிங்கப்பூர் வந்து சேர வேண்டிய இந்த விமானம் தனது இலக்கை இன்னும் சென்றடையாததால், விமானம் தாமதமாக வருவதாக சிங்கப்பூர் விமான நிலைய இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment