கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நேற்றிரவு மு.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் நடந்தது என்ன?

மு.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு நடந்தது. இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கிற தொனியில் தமது கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அன்வர் – மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை உரத்த குரலில் கூறியிருக்கின்றார். அதேபோன்றுதான் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலும் அரசுக்கு சார்பான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீரின் கருத்தும் அரசுடன் கட்சி இணைய வேண்டும் என்பதாக இருந்தது. அதுமட்டுமல்ல கட்சியின் முக்கியஸ்தர்களை விலைகொடுத்து வாங்கும் முயற்சியிலும் இவர் ஈடுபட்டு வருவதாகக் கூறுகின்றார்கள்.

மாகாணசபை உறுப்பினர் தவமும் – மஹிந்தவுக்கு ஆரவு வழங்க வேண்டும் எனும் தொனியில் பேசியுள்ளார். இருந்தாலும், “கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவோம். ஆனால், மைதிரிக்கு ஆதரவு வழங்குவதாயின் அதற்குரிய பலமான காரணங்களை கட்சி முன்வைக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், கட்சியின் பிரதிப் பொருளாளருமான ஜவாத் – நேற்றைய உயர்பீடக் கூட்டத்தில் மிகவும் உணர்சிவசப்பட்டு பேசியதாக அறிய முடிகிறது.

“குர்ஆன், ஹதீஸ் மற்றும் மக்களின் நியாயமான விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு முடிவுகளை எடுப்பதற்கு கட்சித் தலைமை முன்வரவேண்டும்.
மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கிற அழுத்தங்கள் ஏதாவது தலைவருக்கு இருந்தால் அதை இந்த இடத்தில் தலைவர் கூறுங்கள். உங்களோடு நாங்கள் இருப்போம்.

மக்களின் மனநிலைக்கு இணங்கவே நாம் செயற்பட வேண்டும். அந்தவகையில், நான் எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கே எனது ஆதரவை வழங்கவுள்ளேன்” என்றார் ஜவாத்.

இதன்போது குறுக்கிட்ட மாாணசபை உறுப்பினர் தவம்; “ஜவாத் இப்படி கூறியதற்காக – அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” என்றார்.
அப்போது தவத்தை பார்த்து ஜவாத் இப்படிக் கூறினார்.

“தலைவர் அஷ்ரப் அவர்களை சுடுவதற்கு ஒரு தோட்டா இல்லையா என்று கேட்டவர்களும், தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின்போது – பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தவர்களும், நோன்பு திறக்க வந்த தலைவரை ஊருக்குள் வராமல் தடுத்தவர்களும் கட்சிக்குள் துள்ளுவது எனக்கு மிகவும் கவலை தருகிறது”

தவம் கதைக்கக்கூடாது என்று சீறிப்பாய்ந்த ஜவாத் ஹாபிஸ் நஸீரும் கதைக்க முடியாது. இவர்கள் கட்சிக்கு செய்த துரோகங்களை மக்கள் மறக்கமாட்டார்கள் என்றார். அமைச்சர் மன்சூர் கதைக்கலாம். அவர் உண்மையான கட்சிக்காரன் மற்றவர்கள் எல்லாம் பதவிக்காக வந்து ஒட்டியுள்ள ஒட்டுன்னிகள்.

மாகாண சபை உறுப்பினர் தவம் ஆரம்பத்தில் அரசுக்கு சார்பாகவும் பிற்பகுதியில் அரசுக்கு எதிராகவும் கருத்துக்கூறியவர் இன்று மீண்டும் அரசுக்கு ஜால்ரா அடிப்பது இவர்களுக்கு அரச தரப்பில் ஏதோ கிடைத்தவிட்டது என்று மக்கள் பேசிக் கொள்வது உண்மையாகிவிட்டதாக கூட்டத்தில் கலந்து கொண்ட உயர்பீட உறுப்பினர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
இன்று தவம் அறிக்கைகளையும் விடுகின்றார். அதிலும் கதைகளைப் புரட்டிச் சொல்லுகின்றார்.

கிழக்கு மாகாண சபையின் வரவு – செலவுத் திட்டம் சபைக்கு வந்தபோது, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – தவத்தை தொலைபேசியில் அழைத்து, ‘இந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு மு.கா. உறுப்பினர்கள் ஆதரவு வழங்கக் கூடாது. உடனடியாக சபையிலிருந்து வெளியேறுங்கள்’ என்று உத்தரவிட்டார்.

அப்போது தவம்; ‘அப்படி வெளியேறினால், ஆளுநர் எதுவும் பிரச்சினைப்படுத்த மாட்டாரா சேர்..’ என்று மு.கா. தலைவரிடம் இழுத்திருக்கிறார்.

”நமது ‘ட்ரான்ஸ்பர்’ கடிதம் ஒன்றைக் கூட கணக்கில் எடுக்காத ஆளுநரைப்பற்றி நமக்கென்ன கவலை. உடனடியாக சபையிலிருந்து வெளியேறுங்கள்” என்று – கடுமையான குரலில் உத்தரவிட்டு விட்டு, தொலைபேசி அழைப்பை – ஹக்கீம் துண்டித்து விட்டார்.

இதன் பிறகும் தவம் விடுவதாக இல்லை. மு.கா. தலைவருக்கு தொலைபேசி அழைப்பெடுத்தார். ”லீடர், இதுதான் உங்கள் முடிவா? எதற்கும் உங்கள் முடிவை கொஞ்சம் மீள்பரிசீலனை செய்யுங்கள்” என்று கேட்டிருக்கிறார் தவம்.

தலைவருக்கு பத்திக் கொண்டுவர, ”முடிவில் மாற்றமில்லை. உடனடியாக கொழும்புக்கு வாருங்கள்” என, வெட்டொன்று துண்டிரண்டு பாணியில் சொல்லி விட்டு, மீண்டும் தொலைபேசியை அடித்து வைத்தார் ஹக்கீம்.
இதன்பிறகுதான், வேறு வழியில்லாமல் – கிழக்கு மாகாண சபையிலிருந்து வெளியேறும் முடிவை – நண்பர் தவம் எடுத்தார்!

- எம்.பாரீஸ் (நன்றி: மப்றூக்)
sonakar

0 comments:

Post a Comment