கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டு பறந்தார் ,,,

அரசாங்கத்திற்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருத்து முரண்பாட்டு மோதல்கள் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வார காலமே எஞ்சியிருக்கும் நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இப்படியான சூழலில் ஏனைய அமைச்சர்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பிரசாரங்களில் கலந்து கொள்ளாதிருப்பதால், அவரது தேர்தல் பிரசாரம் ஸ்தம்பித்துள்ளது.

அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சுகாதார அமைச்சை வழங்க வேண்டாம் என ஜனாதிபதிக்கு பசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதனை மீறி, ஜனாதிபதி, திஸ்ஸ அத்தநாயக்கவை சுகாதார அமைச்சராக நியமித்த பின்னர், பசில் ராஜபக்ஷ முழுமையான அமைதியாகியுள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்கினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரிய அதிருப்தி ஏற்படக் கூடும் என பசில் ராஜபக்ஷ எச்சரித்திருந்ததாக கூறப்படுகிறது.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாடுகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இருந்தே ஈடுபட்டு வந்ததுடன் தேர்தல் பிரசார அலுவலகங்களை திறந்ததுடன் நடவடிக்கை காரியாலங்களையும் திறந்து நேரடியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

srilnkamuslim

0 comments:

Post a Comment