கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முன்னால் ஜனாதிபதி சந்திரிக்காவும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கஹடோவிடாவில் (photos)

இன்று நண்பகல் 12.30 மணியளவில் எமது கிராமத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த  கூட்டமொன்றில் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்காவும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க, மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

IMG_20141207_122607_0
இங்கு கருத்துதெரிவித்த சந்திரிக்கா அம்மையார் நாட்டில் அபிவிருத்தி எனும் பெயரில் பாரிய சுரண்டல் இடம்பெறுகின்றதாகவும். இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலே வரலாற்றில் என்றும் இல்லாதவாறு முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய வன்முறைச் சம்பவங்கள் பதிந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், யுத்தம் இல்லாதபோதும், இன்று மக்களுடைய வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளதாகவும் நாம் ஒரு ராத்தல் பானை 3.50 ரூபாவுக்கு  கொடுத்தோம் ஆனால் இப்போது அது 60 ரூபாவுக்கு உயா்தப்பட்டிருப்பதாகவும் அவர் கருத்துக்கூறினார்.

ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்ககவும் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கவும், சிதைந்துபோயுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்பவும் தாம் இம்முறை அரசியல் களத்தில் காலடி எடுத்துவைக்க தேவையேட்பட்டதாகவும். பொதுவேற்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்கள் போட்டியிடும் ”அன்னம்” சின்னத்திற்கு உங்களது வாக்கை வளங்குமாறும் வேண்டிக்கொண்டார்.
IMG_20141207_124004_0
IMG_20141207_124037_0
IMG_20141207_122735_0


0 comments:

Post a Comment