கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மஹிந்தவின் முக்கிய ஆதரவாளர், பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கவுள்ளார்



இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பகுதியாக கருதப்படும் தென்மாகாணம், மாத்தறை மாநகரசபை முதல்வர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கான தமது ஆதரவை விலக்கி, பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்.
தங்காலையில் கடந்த வாரம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னரே தாம் இந்த முடிவுக்கு வந்ததாக மாநகர சபை முதல்வரான உப்புல் நிசாந்த இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காட்டு நீதியை ஒழிக்க சரத் பொன்சேகாவே தகுதியானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவின் தலைமையில் நாட்டின் அனைத்து இனங்களும் சுபீட்சத்தை காணும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தாம் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதன் காரணமாக தமது குடும்பத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment