கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முன்னால் ஜனாதிபதி சந்திரிகாவின் கஹடோவிட வருகை.


கஹடோவிட அல் பத்ரியா மகாவித்தியாலயத்தின் 2009இல் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதற்காக விசேட அதிதியாக வருகை தந்த முன்னால் ஜனாதிபதி சந்திரிகா மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் தற்போதைய நிலைமைபற்றி விளக்கமளித்தார். அவர் கூறுகையில், அவரால் நியமிக்கப்பட்ட இந்த ஜனாதிபதி சிறீலங்கா சுதந்திரக்கட்சி அங்கத்துவத்திலிருந்து பலவந்தமாக அவரை நீக்கியதாகவும், மற்றும் இதுவரைகாலமும் நாட்டில் நடந்திராத இலஞ்சம், ஊழல் மோசடிகள், கொலை, கொள்ளைகள், கடத்தல்கள் என்பன தலைவிரித்தாடுவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் முக்கியமாக அவர் மேலும் கூறிகையில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் காலம் சென்ற அச்ரப் அவர்களுக்கு முஸ்லிம்களுக்கு தேவையான அளவு தொழில் வாய்ப்புக்களை வழங்கும்படி கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும் எதிர் வருகின்ற தேர்தலில் அனைவரும் மிகவும் அவதானமாக சிந்தித்து அமைதியான ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுமாறும் தனது உரையில் குறிப்பிட்டார். அவரது இந்த உரை பொது அபேட்ச்சகர் சரத்பொன்சேகாவை ஆதரிக்க வேண்டுமென்பது மறைமுகமாக இருந்தது.

0 comments:

Post a Comment