கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஈராக் யுத்தம் குறித்த விசாரணையில் டோனி பிளேயர் சாட்சியம்


ஈராக் யுத்தம் தொடர்பான விசாரணையில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் சாட்சியம் வழங்கியுள்ளார். ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் தொடரும் ஒரு அச்சுறுத்தலாக மாறிவந்தார். ஆதலால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரிட்டனும் அமெரிக்காவும் தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று டோனி பிளேர் கூறியுள்ளார். சதாம் உசைன் தொடர்பான பிரிட்டனின் நிலைப்பாடு, 11 செப்டம்பர் 2001 அன்று அமெரிக்கா மீது அல்-கொய்தா தாக்குதல் என்பவற்றையடுத்து பெரிதும் மாறிவிட்டிருந்தது என பிளேர் குறிப்பிட்டார். பேரழிவு ஆயுதங்களை உருவாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு எம்க்கு உள்ளது. இல்லாவிட்டால் இவ்வகையான ஆயுதங்கள் பயங்கரவாதக் குழுக்களின் கைகளில் சென்று சேர்ந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment