கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் ஏற்பாட்டில் ஈத் பெருநாள் திடல் தொழுகை

கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் வழமைபோன்று இம்முறையும் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை அல்பத்ரியா ம.வி மைதானத்தில் நடைபெற்றது. கடந்த நோன்புப் பெருநாளைப் விடவும் அதிகமான மக்கள் தொகையினர் கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது. பெருநாள் தொழுகையின் பின்னர் மௌலவி முஜாஹித் அவா்களின் உரை இடம் பெற்றது. அவ்வுரையில் அன்பு கருனை இரக்கம் போன்றன அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருள்கள் என்றும் அதனைப் பற்றி இறைவன் மறுமையில் விசாரிப்பான் என்றும் கூறினார். மேலும் இப்பெருநாள் தினத்தில் ஏழைகளைக் கவனிக்க வேண்டியதன் அவசியத்தையும் வழியுறுத்திக் கூறினார். இம்முறை சுமார் 1500இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.







 

0 comments:

Post a Comment